Showing posts with label பைபிள். Show all posts
Showing posts with label பைபிள். Show all posts

Saturday, July 18, 2009

குரான் முரண்பாடுகள்-44

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
 
இயேசுவின் பிறப்பு அறிவிப்பின் போது மரியாளின் கேள்வி
(கீழ்கண்ட வசனங்களில் ஆங்கில வார்த்தைகளை நாம் இட்டுள்ளோம்)
3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன்(Walad) உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது." 
19:20 அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்(Ghulam) உண்டாக முடியும்?" என்று கூறினார். 

 

 
 
 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, July 15, 2009

குரான் முரண்பாடுகள்-42

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
தேவ தூதரிடம் ஜகரியா பேசுகிறார்
3:40 அவர் கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான். 
19:8 (அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?" எனக் கூறினார். 

 

 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tuesday, July 14, 2009

குரான் முரண்பாடுகள்-41

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
ஸமுது கூட்டத்தாரை ஸாலிஹ் எச்சரிக்கிறார்
7:73 ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார். 
11:64 "அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்). 
26:154-155 அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."  "இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்." 

 

 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, June 8, 2009

குரான் முரண்பாடுகள்-40

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
 
 
இஸ்ரேல் மக்களுக்கு கட்டளைகள்
2:58 இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்;மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். 
7:161 இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம்.நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது. 

 

 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday, February 1, 2009

வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா?

 

More is Better?

மற்ற மார்க்கங்களை விட இஸ்லாம் தான் உண்மையானது மற்றும் சிறப்பானது என்பதை நிருபிப்பதற்காக இஸ்லாமியர்கள் சொல்லும் ஒரு "ஆதாரம்" இது தான், அதாவது "உலகின் பல பாகங்களில் இஸ்லாம் மிகவும் வேகமாக வளருகிற மதமாக இருக்கிறது". இந்த வாதம் கீழ் கண்ட விதமாக அமைந்துள்ளது.

வாதம்:

மற்ற எல்லா மதங்களை விட இஸ்லாம் தான் உண்மையானது

இதற்கு ஆதாரம்:

இஸ்லாம் தான் மிகவும் வேகமாக வளருகிற மதமாக உள்ளது

முடிவு/ஊக‌ம்:

வேகமாக வளருகிற மதம் தான் உண்மையான மதமாக இருக்கிறது

 ---

Claim:

Islam is superior to all other religions

Support:

Islam is the fastest growing religion

Warrant/ Assumption:

The fastest growing religion is the superior religion

இந்த‌ வாத‌த்தின் மூல‌ம் கிடைத்த "முடிவு" விவாத‌த்திற்கு உட்ப‌ட்ட‌து, ம‌ற்றும் இத‌ற்கு ச‌ரியான‌ சான்று த‌ர‌ப்ப‌ட‌வேண்டும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்கள் பதில் சொல்லியாக வேண்டும், அதாவது:

"வேகமாக வளருகிற மதம் தான் மற்ற மதங்களை விட சிறந்தது/உண்மையானது என்று நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்?

why do you believe that the fastest growing religion is the superior religion?
"

இக்கேள்விக்கான‌ ப‌தில் குழ‌ப்ப‌முள்ள‌தும், இதற்கு இன்னும் அனேக ஆதாரங்கள் தேவையாயும் உள்ளது. நான் இதுவரை எந்த முஸ்லீமிடமிருந்தும் இக்கேள்விக்கான சரியான பதிலை பெறவில்லை. இப்போதாவது, இக்கேள்விக்கான சரியான பதிலை இஸ்லாமியர்கள் சிந்தித்து தரும்படி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். முஸ்லீம்கள் பதிலை கொடுப்பதற்கு முன்பாக, இந்த வாதத்தில் உள்ள பிரச்சனைகளை நான் உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன்.

1. மேற்கத்திய நாடுகளில் மெக்டொனால்ட்சஸ்(McDonalds) என்ற துரித உணவகம், மிகவும் வேகமாக வளருகிறது. பெரும்பான்மையாக ஒவ்வொரு சிறிய பட்டணத்திலும் இந்த மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகம் இருக்கும். உண்மையைச் சொல்லப்போனால், இந்த உணவகத்தின் உணவுகளில் அவ்வளவு அதிகமாக ருசி இருப்பதில்லை. இப்படி இருந்தும் இந்த மெக்டொனால்ட்ஸ் ஏன் இவ்வளவு வேகமாக வளருகிறது என்று அனேகருக்கு புரியாத புதிராகவே உள்ளது. மெக்டொனால்ஸ் அமோகமாக வளர்ந்துள்ளது, இதற்கு காரணங்கள் இவைகளாகும், உணவுகளின் விலை மிகவும் மலிவானது, வேகமாக பரிமாறப்படுகிறது, குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான வசதிகள் அங்கு அதிகமாக இருக்கிறது, மற்றும் உணவுகள் அவ்வளவு ருசி குறைவாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் குறைந்ததாக இருந்தாலும், "இவ்வுணவுகள் நமக்கு வேண்டாம் என்றுச் சொல்லும் அளவிற்கு மோசமாக இல்லை" என்பதாலும் இவ்வுணவகங்கள் வேகமாக வளருகிறது. ஆக, இதே போல உள்ள காரணங்கள் இஸ்லாமுக்கும் பொருந்தக்கூடியவைகளாக இருக்கும்.

2. வைரஸ்கள் என்றுச் சொல்லக்கூடிய நுண்ணுயிர்கள் ஒரு உயிரினத்தில்(உடலில்) நுழைந்த உடன் அவைகள் மிகவும் வேகமாக வளருகின்றன, மற்றும் அதிக வேதனையை உண்டாக்கி விடுகின்றன. விஷயம் இப்படி இருப்பதினால், மனிதனை விட வைரஸ்கள் சிறப்பானவைகள் என்று பொருள் கொள்ளமுடியுமா? வளரும் வேகத்தைக் கண்டு வேண்டுமானால் வைரஸ்கள் நம் உடலை விட சிறப்பானது என்றுச் சொல்லமுடியுமே தவிர, வைரஸ்கள் நம்மைக் காட்டிலும் அறிவிலும், சிந்திக்கும் ஆற்றலிலும், ஆன்மீகத் தன்மையிலும் சிறப்பானது என்றுச் சொல்லமுடியுமா? சொல்லமுடியாது என்பது தான் உண்மை. இன்னும் சில வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வகையான உயிரினங்களில் இன்னும் அதிகமாக வளருகிறது என்பதை நாம் அறிவோம்.

3. மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரமும், முதலாளித்துவமும்(Western culture and Capitalism) இஸ்லாமிய நாடுகளில் அதிகமான வேகத்தில் வளர்ந்து வருகிறது. அப்படியானால், இஸ்லாமிய கலாச்சாரத்தை விட மேற்கத்திய கலாச்சாரம் மிகவும் சிறந்தது/உயர்ந்தது என்றுச் சொல்லமுடியுமா? மேற்கத்திய தொலைக்காட்சி சானல்கள், தொழில் நுட்பங்கள், இசை, திரைப்படங்கள் போன்றவைகள் இஸ்லாமிய நாடுகளில் தங்கள் பாதத்தை பதித்து, வேகமாக வளர்ந்து வருகின்றன. இஸ்லாமிய கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. இஸ்லாமியர்கள் சொல்லும் வாதங்களின் அடிப்படையில், "மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவம் போன்றவைகள், அல்லாஹ்வினால் உண்டாக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரத்தை விட சிறந்தது/மேன்மையாது என்று கண்டிப்பாக‌ச் சொல்லலாம்".

இப்படிப்பட்ட கணக்கிலடங்கா உதாரணங்களை என்னால் தரமுடியும். வேகமாக வளருவது தான் மற்றவைகளை விட மேன்மையானதாக/உண்மையானதாக இருக்கும் என்ற வாதம் எவ்வளவு மடமையாக உள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இஸ்லாம் இங்கும் அங்குமாக‌ வ‌ள‌ர‌லாம், இஸ்லாமைப்போல‌ மெக்டொனால்ஸ்ஸும் வ‌ள‌ருகிற‌தே, அவ்வ‌ள‌வு ஏன், எயிட்ஸ் என்ற‌ வியாதி கூட‌ வேக‌மாக‌ ப‌ர‌வுகிற‌தே! இஸ்லாம், மெக்டொனால்ஸ், ம‌ற்றும் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளி நோய், இவைக‌ள் அனைத்தும் வேக‌மாக‌ வ‌ள‌ருகிற‌து என்ப‌தால், ம‌ற்ற‌வைக‌ளை விடை இவைக‌ள் சிற‌ந்த‌து என்றுச் சொல்ல‌முடியுமா? ஒரு மார்க்க‌ம் உண்மையான‌தாக‌ இருக்கிற‌து என்ப‌த‌ற்கு, "வேக‌மாக‌ வ‌ள‌ருவ‌து" ஒரு ஆதார‌மாக‌ இருக்க‌முடியுமா?

****

இப்போது நீங்கள் என் மீது குறைகூறுவீர்கள், இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது, ஆப்பிளையும், ஆரஞ்சுப் பழத்தையும் ஒப்பிடுவதற்கு சமம் என்றுச் சொல்வீர்கள். மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மக்களின் வளர்ச்சி விகிதம் மற்ற மதங்களை விட இம்மதம் சிறந்தது என்பதை காட்டும் அளவுகோளா?

கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்காவில் இஸ்லாமின் வளர்ச்சியை விட‌ மற்ற மதங்கள் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளன. 1991 லிருந்து 2001 வரையுள்ள 10 ஆண்டுகளில்( World Almanacன் படி) அமெரிக்காவில் 6 மில்லியன் முஸ்லீம்கள் இருந்திருக்கிறார்கள். இந்த 10 ஆண்டுகளில், யோகோவா விட்னஸ் என்ற மதத்தவர்கள் 26% வளர்ச்சி அடைந்துள்ளார்கள். யூனிடேரியன் என்பவர்கள் 20% வளர்ச்சி அடைந்துள்ளார்கள், மர்மோன்ஸ் என்ற பிரிவினர் 18% வளர்ச்சியடைந்துள்ளார்கள். இஸ்லாமியர்களின் வாதத்தின் படி, அமெரிக்காவில் இஸ்லாமை விட யேகோவா விட்னஸ், யூனிடேரியன் மற்றும் மர்மன்கள் வேகமாக வளர்ந்துள்ளார்கள், இதன் படி பார்த்தால், இஸ்லாமை விட இந்த மார்கங்கள் தான் உண்மையான மார்க்கங்கள் என்று உலக இஸ்லாமியர்கள் நம்மை நம்பச் செய்கிறார்கள், அப்படித்தானே! இப்போது இஸ்லாமியர்கள் World Almanac என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பை நாங்கள் நம்பமாட்டோம், ஏனென்றால், இந்த நிறுவனம் சியோன்காரர்களால் நடத்தப்படுகிறது என்று பதில் சொல்வார்கள். எந்த கணக்கெடுப்பும் புள்ளிவிவரங்களும் இஸ்லாமியர்களின் வாதத்திற்கு எதிராக இருக்குமானால், உடனே "கிறிஸ்தவர்கள் யுதர்களின் இரகசிய சூழ்ச்சி இது(Christian-Zionist Conspiracy Theory)" என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் இஸ்லாமியர்கள், சரி தானே!

Source: www.answering-islam.org/Assumptions/moreisbetter.htm

Tuesday, January 27, 2009

பாகிஸ்தான் பெண்: நான் ஒரு முஸ்லீமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்

 
-----------------------------------
 
 
கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்:

சுவிசேஷத்தின் தேவை இஸ்லாமியர்களுக்கு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு இயேசு என்னும் சத்தியத்தை நாம் சொல்லவில்லையென்றால், அவர்கள் ஒரு நாள் இஸ்லாமின் உண்மை முகத்தை அவர்களாகவே கண்டுபிடித்து, நாத்தீகர்களாக மாறிவிடுகிறார்கள்.

இதோ இஸ்லாமின் உண்மை முகத்தை க‌ண்டுக்கொண்ட ஒரு பாகிஸ்தான் இஸ்லாமிய பெண், எப்படி இஸ்லாமை விட்டுவெளியேறுகிறார் என்பதை விவரிக்கிறார். இந்த‌ ச‌கோத‌ரி சொல்லும் விவ‌ர‌த்தை ஒரு ஆண் சொன்னால் அவ்வ‌ள‌வு எடுப‌டாது, ஆகையால் ஒரு இஸ்லாமிய‌ பெண் சொல்வ‌தை நீங்க‌ளே கேளுங்க‌ள்.

Faith Freedom என்ற தள நிர்வாகியாகிய அலி சினாவிற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய பெண் எழுதிய கடிதம். நான் என் கட்டுரைகளில் எழுதும் விவரங்களை, ஒரு இஸ்லாமிய பெண் எழுதுவதை படியுங்கள்.
இந்த கட்டுரையை இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை கிறிஸ்தவர்கள் மத்தியில் உண்டாக்க பதிக்கப்படுகிறது.

---------------

I am ashamed to have ever been a Muslima

பாகிஸ்தான் பெண்: நான் ஒரு முஸ்லீமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்




திரு சினா,

நான் என் வாழ்க்கையில் இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌டித‌த்தை எழுதுவேன் என்று நினைத்துக்கூட‌ பார்க்க‌வில்லை. நீங்க‌ள் ஒரு இஸ்லாமிய‌ பெண்ணோடு விவாதித்த‌ க‌ட்டுரையை நான் முத‌ன் முத‌லில் ப‌டித்தேன் ( FrongPage Magazine Article: http://www.frontpagemagazine.com/Articles/Read.aspx?GUID=3DDB4AD9-F928-4EF8-ADEC-8A9C90594254)


நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது, இஸ்லாமில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றி அறிந்து எனக்கு வேதனை உண்டானது. அதாவது, சொத்துரிமை மற்றும் விவாகரத்து சம்மந்தப்பட்ட விவரங்களும் இதில் அடங்கும். ஆனால், என் வாழ்க்கையில் இதுவரையில், போரில் பிடிப்பட்ட பெண்களை முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்பதையும், அதனை நபி அனுமதித்தார் என்பதையும் நான் அறிந்ததேயில்லை என் வாழ்க்கையில் நான் படித்த அனைத்து இஸ்லாமிய புத்தகங்களும் போரில் பிடிப்பட்ட கைதிகளை முஸ்லீம்கள் மிகவும் கண்ணியத்தோடு நடத்தினர் என்று சொல்வதை நான் படித்துள்ளேன். ஆனால், பிடிப்பட்ட பெண்களை கற்பழிப்பதில் என்ன கண்ணியம் இருக்கிறது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெக்காவை கைப்பற்றிய போது மட்டுமே இரக்கத்தோடு நடந்துள்ளார்கள். மெக்கா என்பது நபி என்று அழைக்கப்பட்டவர் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும் அங்கு அவரது உறவினர்கள் இருந்தார்கள் என்பதாலும், மெக்காவிற்கு மட்டும் இரக்கம் காட்டியிருக்கலாம்.


ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். பாகிஸ்தானில் இருக்கும் மௌலவிகள் எங்களுக்கு வினோதமான விஷயங்களைச் சொல்வார்கள். அதாவது, கண்ணாடியிலே நம்முடைய முகத்தை பார்க்கும் போது இந்த சூராவை ஓதவேண்டும், வீட்டில் நுழையும் போது இதை ஓதவேண்டும், பிராயாணம் செய்ய புறப்படும் போது, இந்த துவாவை(ஜெபத்தை) செய்யவேண்டும் என்று பல விவரங்களைச் சொல்வார்கள். இப்படிப்பட்ட விவரங்களை எங்களுக்கு அவர்கள் போதிப்பார்கள். ஆனால், போரில் பிடிப்பட்ட பெண்களை முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்ற மிகப்பெரிய விஷயத்தை எங்களிடம் சொல்லாமல் ஏன் மறைத்தார்கள்? ஆம், இதனை நாம் "கற்பழிப்பு" என்று தான் அழைக்கமுடியும். எப்படி ஒரு பெண் தன் சகோதரர்கள், அல்லது தந்தை அல்லது கணவனை கொலை செய்த அந்த ஆணோடு உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பாள். இந்த சூழ்நிலையில் என்னையோ அல்லது என் சகோதரியையோ அல்லது என் தாயையோ நான் கற்பனை கூட செய்து பார்க்க என்னால் முடியவில்லை. இந்த விவரம் என் மனதை கலக்கிவிடுகிறது. அலி சினா நீங்க‌ள் என் க‌ண்க‌ளை திற‌ந்துவிட்டீர்க‌ள். ஈராக்கில் பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌ இராணுவ‌ வீர‌ர்கள் செய்த தவறைப் பற்றி நான் மிக‌வும் வேத‌னை அடைந்தேன். ஆனால், இங்கு க‌வ‌னிக்க வேண்டிய‌து விவ‌ர‌ம் என்ன‌வென்றால், முஸ்லீம்க‌ள் இவ‌ர்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளா? முஸ்லீம்க‌ள் த‌ங்க‌ளால் முடிந்த‌ பெண்க‌ளை எல்லாம் க‌ற்ப‌ழித்தார்க‌ள். இப்போது, இஸ்லாமிய‌ கோட்பாட்டின் ப‌டி, ஈராக் ஒரு போர்க்க‌ள‌மாக‌ உள்ள‌து, என‌வே, இஸ்லாமிய‌ போத‌னைக‌ளின் ப‌டி, ஈராக்கை ஆக்கிர‌மித்த‌ இராணுவ‌ங்க‌ள், ஈராக் பெண்க‌ளை க‌ற்ப‌ழிப்ப‌து நியாய‌ம் தானே?


மற்றும் இஸ்லாமிய லாஜிக் படி, ஈராக் போரில் தோற்றுவிட்டது, இஸ்லாமின் லாஜிக் படி, ஈராக்கின் மக்கள் அனைவரும் பெண்கள் குழந்தைகள் உடபட‌ அமெரிக்காவிற்கு அடிமைகள். ஆனால், ஈராக்கில் சில எண்ணிக்கையுள்ள பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டார்கள், மற்றும் கற்பழித்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், சிறைச்சாலைக்குச் சென்றார்கள். இதையே நாம் வேறு வகையில் பார்க்கலாம், அதாவது இஸ்லாமியர் அல்லாத நாட்டை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்தால், அங்குள்ள அனைத்து பெண்களும் போரில் பிடிப்பட்ட சொத்துக்களாக பெண்கள் கருதப்படுவார்கள், அவர்களை இஸ்லாமிய இராணுவம் எல்லா பெண்களையும் கற்பழித்து இருப்பார்கள்.

என்னுடைய 6 வயது மகள் அல்லது எந்த ஒரு 6 வயது சிறுமி, 50 வயதான ஒரு ஆணை திருமணம் செய்துக் கொள்வதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது, அந்த 50 வயது ஆண் ஆன்மீகத்தில் மத விவகாரங்களில் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி.

நான் ஒரு பெண். முஹம்மது சொன்னது போல நான் அறிவில் குறைந்தவள் இல்லை. எனக்கு ஞானத்திலும் குறைவு இல்லை. என் வாழ்க்கையில் அறிவில் பல ஆண்களை நான் ஜெயித்து இருக்கிறேன். நான் படித்து பட்டம் பெற்றேன், இப்போது இரண்டாவது பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். இப்படி இருக்கும்போது எங்கள் நபி எப்படி "பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள்" என்றுச் சொன்னார்? முஹம்மதுவின் இவ்வார்த்தைகள் விஞ்ஞானத்தின் படி பிழையானதாகும்.


இப்போது ஒரு பெண் கற்பழிக்கப்படுவதைப் பற்றி கவனிப்போம். தன்னை ஒருவன் கற்பழித்தான் என்பதற்கு 4 ஆண்களை, அந்தப் பெண் உலகத்தில் எந்த நாட்டிலிருந்து சாட்சிகளாக கொண்டுவருவாள். கற்பழிப்பு என்பது சர்கஸ் இல்லை, எல்லாரும் வந்து பார்த்து சிறப்பித்து தாருங்கள் என்று அழைப்பிதழ் கொடுப்பதற்கு. கற்பழிப்பு என்பது மனிதன் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்தில் நடத்தப்படுவது. உதாரணத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கற்பமாகிவிட்டாள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். தான் தற்பழிக்கப்பட்டாள் என்பதை நிரூபிப்பதற்கு தனக்கு 4 ஆண்களின் சாட்சிகள் தேவை, ஆனால், அவளுக்கு சாட்சி சொல்ல ஒரு ஆணும் கிடைக்கமாட்டான். ஆனால், திருமணத்திற்கு வெளியே தான் "உடலுறவில் ஈடுபட்டாள் என்பதற்கு மட்டும் ஆதாரத்தை தன் கர்ப்பத்தில் சுமந்துக்கொண்டு இருப்பாள்". இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய சட்டப்படி என்ன நடக்கும்? தன்னை ஒருவன் கற்பழித்தான் என்பதை நிருபிக்க தன்னால் ஒரு ஆதாரத்தையும் அவளால் காட்டமுடியாது? ஆக, அவள் விபச்சாரம் செய்தாள் என்பதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்லெறியுண்டு மரிப்பாள். இது நியாயமானதாகவும் அல்லது லாஜிக்காகவும் (அறிவுடமையாகவும்) தெரிகின்றதா? இல்லை இல்லை, இதயம் மற்றும் மூளை என்பது ஒருவனுக்கு இருந்தால், அவனுக்கு இவைகள் நியாயமானதாக தெரியாது.


ஜூலியா ரோச் என்ற பெண்மணியோடு உங்களின் உரையாடல் என்னை அசைத்துவிட்டது. இதைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், மூளை குழம்பிவிட்டதாக உணருகிறேன். என் வாழ்க்கை முழுவதும் நான் பின்பற்றியது என்ன? இஸ்லாமிய அறிஞர்கள் நமக்கு வெறும் நல்லவைகளை மட்டும் சொல்வார்கள், ஆனால், இந்த உண்மைகளைச் சொல்லமாட்டார்கள்.


பாகிஸ்தானில் இருக்கும் நாங்கள் குர்‍ஆனை மிகவும் கூர்ந்து கருத்தோடு படிக்க கவலைப்படுவதில்லை. எங்கள் பள்ளிக்கூடங்களில் சொல்லப்பட்டவைகளை மட்டுமே நாங்கள் தெரிந்துவைத்துக்கொண்டு இருக்கிறோம். மீதமுள்ள விவரங்களுக்கு நாங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் மீது ஆதாரப்பட்டு இருக்கிறோம், இவர்கள் நம்மிடம் பொய்களைச் சொல்வார்கள், இஸ்லாமில் உள்ள நல்லவைகளை மட்டும் சொல்வார்கள், அடிமைகள் பற்றியும், கற்பழிப்பது பற்றிய விவரங்களும் சொல்லமாட்டார்கள்.


இந்த விவரங்களை நான் என் குடும்ப நபர்களுக்குச் சொன்ன போது, என்னை அவர்கள் "காபிர்" என்று சொல்லி கேலி செய்தார்கள். நான் பாகிஸ்தானில் இருக்கும் வரை நான் இப்படியே இருந்துவிடுகிறேன். இஸ்லாமுக்கு எதிராக சொல்லப்படும் எதையும் நான் கேட்கக்கூடாது. என் கண்களையும் காதுகளையும் நான் மூடிக்கொள்ளவேண்டும். நான் இஸ்லாமை விட்டு வெளியே வரக்கூடாது, அப்படி வந்தால் என்னைப்பற்றி என் பெற்றோர்கள் முஸ்லீம்களிடையே வெட்கமடையவேண்டி வரும். நான் இனி இஸ்லாமை பின்பற்றப்போவதில்லை. ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைத்து என் தோழிகளுக்கு நான் சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் அவர்கள் சிந்திக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.


இப்படிக்கு
கோமல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Source: http://www.faithfreedom.org/2009/01/20/i-am-ashamed-to-have-ever-been-a-muslima/

Tamil Christians Source:  http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=27823#27823

 
 

குரான் முரண்பாடுகள்-24

ஒரே நிகழ்ச்சியில் வரும் "நேரடி பேச்சுக்களில்" உள்ள வித்தியாசங்கள்


Variant "direct speech" quotations from the same incidents:


கீழே தரப்பட்ட நிகழ்ச்சி விவரங்கள் "நடந்துவிட்ட‌ நிகழ்ச்சியைப்" பற்றியது தான். அவைகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மை வாய்ந்த சரித்திர நிகழ்வுகளாகும்(உதாரணத்திற்கு, அல்லா ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து அனுப்பியது ஒருமுறைத் தான், அல்லா மோசேயை எரியும் புதரிடம் சந்தித்தது ஒரு முறை தான்...). ஆக என்ன நடந்தது என்பதற்கு? ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு. ஆனால், குர்‍ஆனில் உள்ள பல சூராக்களில், இருவருக்கும் அல்லது அனேகருக்கும் இடையே நடந்த பேச்சு உரையாடலை இரண்டு/மூன்று வித்தியாசமான முறையில் குர்‍ஆன் சொல்கிறது. இவைகள் அனைத்தும் "நேரடி உரையாடல் பேச்சுக்கள்-all 'direct speech' quotations" தான், இவைகள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குர்‍ஆனில் வித்தியாசமாக உள்ளது. உண்மையில் இந்த மேற்கோள்களில் பேசுபவர் "பேசிய வார்த்தைகள்" எது? அவைகளில் எந்த விவரம் சரியானது?
 
1) ஆதாமை உருவாக்கியதைப் பற்றி அல்லாஹ் பேசுகிறார்


 
15:28 (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
38:71 (நபியே! நினைவு கூர்வீராக!) "நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; 

 

 

Tuesday, January 20, 2009

மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா? - Is the Savior necessarily God?



 



 

பொதுவான கேள்விகளுக்கு தொடர் பதில்கள்

 

மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா?



Is the Savior necessarily God?

 

சாம் ஷமான்(Sam Shamoun)

 
கேள்வி:
 
இயேசுவை "மீட்பர் – Saviour" எனச் சொல்லப்பட்டுள்ள‌தினால், கிறிஸ்துவர்கள் அவரைக் "கடவுள்" என வாதிடுகின்றனர். ஆனால், பழைய ஏற்பாட்டில் யேகோவா தேவன் ஒருவ‌ரே "மீட்பர்" எனச் சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 43:11, 45:21, ஓசியா 13:4). இந்த வாதம், யேகோவா தேவன் ஒருவரே மீட்பராக இருப்பினும் அவர் தம் சித்தத்தை நிறைவேற்றுகையில் தமது பிரதிநிதியாக இன்னொருவரை நியமித்து அனுப்புகிறார் என்கின்ற விவரத்தை காணத் தவறுகிறது. உதாரணமாக, பழைய ஏற்பாட்டில், ஒத்னியேல் என்கின்ற ஒரு இஸ்ரவேலரை, இஸ்ரவேல் மக்களை மீட்க யேகோவா தேவன் பயன்படுத்தினார் எனப் பார்க்கிறோம். அவரும் கூட "மீட்பர்" என்றே அழைக்கப்படுகிறார்! (நியாயாதிபதிகள் 3:9, ஓபதியா 1:21). யேகோவா தேவன் ஒருவரே மீட்பர் எனச் சொல்லும் போது, அது, அவர் ஒருவரே மீட்பின் பிறப்பிடமாய் இருக்கிறார் என்றே உண்மையில் அர்த்தமாகின்றது. வேறு எவரையும் மீட்பினைக் கொண்டுவர தேவன் பயன்படுத்த முடியாது என இதனைப் பொருள் கொள்ளலாகாது. இதன் அடிப்படையில், இயேசு, தேவனின் பிரதிநிதியாக தேவனால் "மீட்பர்" எனப் அழைப்பட்டிருந்தால், அவரைக் "கடவுள்" என‌ அழைப்பது எவ்விதத்தில் நிரூப‌ண‌மாகும்?
 
பதில்:

யேகோவா தேவனுக்கு இணையாக வேறு எந்த இரட்சகரும் இல்லை எனச் சொல்லும் வேத வசனங்கள் இவைகளே:
 
"நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்து கொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை"(ஏசாயா 43:10-11).

 
"நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறிய வேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை"(ஓசியா 13:4).
 
 
ஆனால் இந்தக் கேள்வியிலேயே உள்ளபடி "இரட்சகர்/ மீட்பர்" என அழைக்கப்படும் வேறு நபர்களும் உண்டு எனவும் இது அவர்களை கடவுளாகவோ அல்லது தெய்வீகத் தன்மை உள்ளவர்களாகவோ ஆக்கவில்லை எனவும் காண்கிறோம்.
 
 
"கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோப மூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப் போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட போது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும் படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப் பண்ணினார்"(நியாயாதிபதிகள் 3:8-9).

"ஏசாவின் பர்வதத்தை நியாயந் தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்" (ஒபதியா 1:21).
 
 
இவ்வாறு ஒப்பிடுவதில் பிரச்சினை என்னவென்றால், இயேசுவை இரட்சகர் என்று அழைப்பதற்கும் ஏனையோரை அவ்வாறு அழைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான். முதலாவதாக, தேவன் இந்த மனிதர்களை "இஸ்ரவேலை அதன் பகைவர்களிடமிருந்து மீட்பதற்காக" பயன்படுத்தினார். அவர்கள் இஸ்ரவேலின் நெருக்கத்தினின்று அதைக் காப்பாற்ற அனுப்பப்பட்டனர். அவர்களின் பாவத்தினின்று அவர்களை மீட்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு நித்திய வாழ்வினை வழங்கவோ அவர்கள் அனுப்பப்படவில்லை. அது தேவனால் மட்டுமே முடியும்.

 
இரண்டாவதாக, இந்தக் கேள்வியிலேயே அமைந்துள்ளபடி, இரட்சிப்பு யேகோவா தேவனிடமிருந்து மட்டுமே வர முடியும்; அது அவருக்கே உரியது என பழைய ஏற்பாடு வேத வசனங்கள் போதிக்கிறது.
 
"இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின் மேல் இருப்பதாக" (சங்கீதம் 3:8).

"நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்" (யோனா 2:9).
 
 
இங்கு தான் இயேசுவின் தெய்வீகத் தன்மைக்கான நிரூபணம் வெளிப்படுகிறது. இரட்சிப்பு ஆண்டவராகிய இயேசுவுக்கே உரியதாகி அவரிடமிருந்தே புறப்படுகிறது என புதிய ஏற்பாடு கூறுகிறது.
 
 
"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்" (வெளி 7:10).
 
 
மேலும், யேகோவா தேவன் அவர் தம்மக்களை அவருக்கே உரியவர்களாக்கும் பொருட்டு அவர்களை பாவத்தினின்று மீட்டுக் கொண்டாரென எபிரேய வேதமாகிய பைபிள் தெரிவிக்கின்றது‌.
 
 
"இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக் கொள்வீர்களானால்,சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது" (யாத்திராகமம் 19:5).

"நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார்"(உபாகமம் 7:6).

"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்து கொண்டார்"(உபாகமம் 14:2).

"கர்த்தரும் உனக்கு வாக்குக் கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக் கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்.."(உபாகமம் 26:18).

"இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்"(சங்கீதம் 130:7-8).

"அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப் படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ் செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் "(எசேக்கியேல் 37: 23).
 
 
எனினும், ஆண்டவராகிய இயேசு, யேகோவா தேவன் செய்தது போன்றே செய்தார் என புதிய ஏற்பாடு போதிக்கிறது. சான்றாக, அவர் பாவிகளை அவர்களது பாவங்களினின்று மீட்டு அவர்களை அவரது சொந்த ஜனமாக்கிக் கொள்ளவே இவ்வுலகிற்கு வந்தார் என வாசிக்கிறோம்.
 
"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.."(மத்தேயு 1:21).

"நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்."(தீத்து 2:13-14).
 
இறுதியாக, விசுவாசிப்போர் தங்களது அடைக்கலத்தையும் பரிசுத்தமாகுதலையும் சகல முழங்கால்களும் முடங்கும் யேகோவா தேவனிடம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என தீர்க்கதரிசிகள் அறிவித்தார்கள்.
 
"நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள்; இதைப் பூர்வகால முதற் கொண்டு விளங்கப் பண்ணி அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்" (ஏசாயா 45: 21-25).
 
 
மேலும், பழைய ஏற்பாட்டின் படி யேகோவா தேவனுக்கே உரித்தான குறிப்பிடப்பட்ட காரியங்கள் இயேசுவுக்கும் குறிப்பிடப்பட்டன என புதிய ஏற்பாட்டில் காண்கிறோம்.
 
 
"நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்."(I கொரிந்தியர் 1:30-31).

"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்"(பிலிப்பியர் 2:9-11).
 
 
மேலே சொன்னவைகள் ஒரு விவரத்தை தெளிவாக்குகிறது. இயேசுவை, ஒத்னியேல் போன்றவர்களின் வரிசையில் இரட்சகராகக் கருதப்படலாகாது. ஏனெனில், அவர் இஸ்ரவேல் மக்களை அவர்களின் பகைவர்களினின்று இரட்சிக்க அனுப்பப்பட்ட பிரத்தியோகமான மனிதத் தூதர் அல்லர். மாறாக, அவர் தேவன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை செய்யும் படிக்கு பிதாவினால் அனுப்பப்பட்டு இரட்சிப்பின் ஊற்றாகச் செயல்பட்டார். அதாவது அவரை விசுவாசிக்கும் சகல மனிதரையும் அவர் தம் பாவக்கறை நீங்க அவரது மாசற்ற தூய இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து நித்திய மீட்பை அவர்களுக்கு அவரது கீழ்படிதலாலும் தியாகத்தினாலும் பெற்றுக் கொடுத்தார்.
 
 
"கிறிஸ்துவானவர் வரப் போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள் மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச் சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும் பொருட்டு அவர் மரண மடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்து கொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்" (எபிரெயர் 9:11-15).

"தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்"(I யோவான் 4:9,10,14).
 
 
மேலே சொன்னவைகளின் அடிப்படையில், புதிய ஏற்பாட்டின் வேத வசனங்கள் இயேசுவே ஜீவனை உண்டாக்குபவர், அவரே நித்திய மீட்பின் ஊற்றுக்கண், அவரே நமது தேவன் மற்றும் நமது மீட்பர் என புதிய ஏற்பாடு அழுத்தமாக வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டுகொள்வதில் சற்றும் வியப்பில்லை.(In light of the above it is not surprising to discover that the NT documents emphatically proclaim that the Lord Jesus is the Author of life, the very Source of eternal salvation, our great God and Savior: )
 
"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:4).

"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்"(யோவான் 6:37-40).

"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த் தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்"(யோவான் 11:23-27).

"பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்" (அப்போஸ்தலர் 3:14,15).

"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபவத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்"(எபிரெயர் 2:10,11).

"அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்"(எபிரெயர் 5:8-10).

"...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி… அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்"(எபிரெயர் 12:1-2).

"நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:" (II பேதுரு 1:1).

 
த‌ர்க்க‌ சாஸ்திர‌த்தின்(syllogism) அடிப்ப‌டையில் பார்ப்போமானால்:
 
1. யேகோவா தேவ‌ன் ஒருவ‌ரே இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்(Yahweh God alone is the Source of salvation and life).

2. இயேசு இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்(Jesus is the Source of salvation and life).

3. என‌வே இயேசுவே யேகோவா தேவனாவார்(Therefore, Jesus is Yahweh God).
 



 

Monday, January 19, 2009

சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி - The Testimony of Brother Sharafuddin


 


 

மலாய் மொழியில் படிக்க‌ - Bahasa Melayu

 

சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி


The Testimony of Brother Sharafuddin

 
எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.

 
என் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின்(Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிர இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வந்தேன். உசுலுத்தீன்(Usuluddin), குர்ஆனியக் கல்வி போன்றவற்றைப் நான் கற்கவேண்டுமென்று என் பெற்றோர்கள் கண்கானிப்பாய் இருந்தார்கள்.

 
 
இது, நான் ஆன்மீக‌ மற்றும் சமய விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க உதவியது. நல்ல‌ பக்தி விநயத்திலும் மார்க்க எழுத்தாளர்களின் சமயக் கட்டுரைகளையும், பண்டைய இஸ்லாமிய மார்க்க அறிவு கட்டுரைகளை(fiqh and theology) வாசிப்பதிலும் நான் பூரண திருப்தியடைந்தேன். இவைகளில் என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.

 
 
கடவுளுக்குப் பயந்த ஒரு முஸ்லீமாக வாலிப வயதில் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அரும் பாடுபட்டேன். எனது சகோதர சகோதரிகளும் எனது சமயப் பற்றை மற்றும் இஸ்லாமிய மார்க்க ஆன்மீக விவகாரங்களில் நான் அதிக அக்கறை கொண்டு இருப்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

 
 
எனது வாலிப வயதில் நான் இலட்சியமாகக் கொண்ட எனது கனவு பல்கலைக் கழகத்தில் நுழைந்தேன். அப்போது நான் இன்னும் பல வாழ்வின் ஐயங்களுக்கு இஸ்லாம் போதனைக்குள் பதிலைத் தேடிக் கொண்டிருந்தேன். இஸ்லாம் தான் மனிதர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய (இயல்பான) இயற்கை சமயம்(Natural Religion) என்று இன்னும் நம்பிக் கொண்டிருந்தேன்.

 
 
படிப்படியாக எனது சிந்தனை வளர‌ ஆரம்பித்தது. குறிப்பாக பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடனும் நண்பர்களுடனும் நேரடி மார்க்க விவாதத்தில் ஈடுபட்ட போது இது நிகழ்ந்தது. நான் ஏன் என் சிந்தனைகளை விரிவாக்கவேண்டிய அவசியத்தில் இருந்தேன் என்பதற்கு ஒரு காரணமுண்டு. அதாவது நான் தினமும் தொடர்ந்து செய்யும் இஸ்லாமிய சடங்குகளினால் திருப்தி அடையவில்லை. மற்றும் ஒரு நல்ல முஸ்லீமாக இருந்தும் எப்படி என் மார்க்கம் என்னை ஒரு "ஆன்மீக அதிருப்தியில்" வைத்தது என்பது தான் என்னை வாட்டியது.

 
 
நான் சொல்லவந்தது இது தான்: நான் இஸ்லாமிய சட்டதிட்டங்களைத்(Din of Islam) தீவிரமாகப் பின்பற்றி வந்தாலும், பர்து ஐன்(fardu-ain) என்றுச் சொல்லக்கூடிய மார்க்க நம்பிக்கை, என்னிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றியிருந்தாலும், அல்லாஹ் அல்லது இறைவன் என்பவர் எப்போதும் என்னிடத்தில் இருந்து மிகவும் தொலைவாக இருப்பதாகவே உணர்ந்தேன். "ஒரு வார்த்தை ஜெபித்தாலும் அல்லா உன்னை நெறுங்கி வருவான்" போன்ற வாசகங்கள் (இஸ்லாமிய ஸ்லோகங்கள்) இருந்தாலும், உண்மையான அனுபவத்தில் பார்த்தால், இது இஸ்லாமிலிருந்து வந்த வாசகம் அல்ல என்பதை அறியலாம். நான் அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவதில் மிகவும் நேர்மையாக இருந்தாலும், அவருடைய அன்பையும் கிருபையையும்(ar-rahman ir-rahim) என்னால் முற்றிலும் நேரடியாக அனுபவிக்க முடியவில்லை, அதைப் பற்றிய நிச்சயத்தன்மையும் இல்லை.

 
 
வேறுவகையாகச் சொல்லவேண்டுமானால், அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) மிகவும் தூரமானவராக இருக்கிறார்! அவர்களின் வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் அவர் தொலைவிலிருந்தே நடத்துகிறார். பிலா தஷ்பிஹ் (Bila Tashmih) என்ற இஸ்லாமிய போதனையும் இதேயே சொல்வதால், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமது சிருஷ்டிப்பின் மீது அல்லாஹ் "அன்பும் கிருபையும்" நிறைந்தவர் என்று இஸ்லாம் போதித்தாலும், பிலா காய்பா(bila kayfa) மற்றும் பிலா தஷ்பிஹ் (bila tashbih) போன்ற தத்துவங்கள், மனிதன் இவ்வுலகில் இயல்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய இறை அன்பையும் கிருபையையும் நிராகரிக்கின்றன. இந்த இரண்டு அல்லாஹ்வின் தன்மைகளும் மனித புத்திக்கு எட்டாததாக இருந்தது.

 
 
இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட கோட்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறார்கள், மற்றும் தக்லிக்(Taqlid) என்றுச் சொல்லக்கூடிய ஆரம்பகால இஸ்லாமிய அதிகார பூர்வமான சட்டங்களை கேள்விகேட்காமல் கீழ்படியவேண்டியுள்ளது. "எப்படி? " என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப(Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்று, உண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக‌ நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன், ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்கிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போது, நாம் நிந்திக்கப்படுவதும், வசைபாடப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போது, நமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் "இது இறைவனின் வார்த்தைகள், இவற்றை நம்பி கீழ்படி!( These are God's words, just believe it and obey it!)" என்பது தான். இறுதியாக, அவர்களும் (உஸ்தாத்களும்) திக்குத் தெரியாதவர்களாய், நம்முடைய நேர்மையான கேள்விகளுக்கு பகுத்தறிவோடு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.

 
 
இது போன்ற அனுபவங்கள் தாம் இஸ்லாமின் நம்பகத்தன்மை மீதும் அதன் போதனைகள் மீதும் நான் கொண்டிருந்த நம்பிக்கையை ஒரே அடியாய் உடைத்து விட்டன. ஆனால், இதே மதம் தான் எல்லா விதமான விக்கிரக ஆராதனைகளையும் முற்றிலும் எதிர்க்கின்றது. இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மது, இஸ்லாமிய போதனையாகிய‌ "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்பதை பரப்பினார். முஹம்மதுவின் காலம் முதற்கொண்டு இன்று வரை, முழு இஸ்லாமிய உலகில், எல்லா இஸ்லாமியர்களும் ஒவ்வொரு நாளும் 5 வேளை மக்காவில் கருங்கல் உள்ள விக்கிர ஆராதனைக்காரர்களின் கோவிலாக இருந்த காபாவை நோக்கி குனிந்து வணங்குகிறார்கள், இது தான் ஆச்சரியம் ஆனால், உண்மை. பகுத்தறிவோடு சிந்தித்தால், அல்லாஹ் அல்லது இறைவன் காணமுடியாதவர் மற்றும் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது உண்மையானால், ஏன் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், பல தெய்வங்களை வணங்கிய மக்களின் கோவிலாக இருந்த‌, கருங்கல் உள்ள மக்காவை நோக்கி தொழுதுக் கொள்ள வேண்டும்? ஆதாம், ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த(hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன? பேச முடியாததும், காண முடியாததும், செவி மடுக்க முடியாததும், சுவாசிக்க முடியாததுமான இக்கல்லை மகிமைப்படுத்தி வணங்கச் செய்வதற்கான காரணம் என்ன?

 
 
போதாதற்கு எல்லா முஸ்லீம்களும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்காமல்(taqlid) விசுவாசத்தோடு இதனைப் பின்பற்ற வேண்டும்? காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும், செவிடும், ஊமையுமான, சுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்லையா? இது விக்கிர ஆராதனை இல்லையா? இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய பாவம் செய்தவதற்கு ஆரம்பமில்லையா அல்லது மூலமில்லையா?

 
 
இஸ்லாம் மீது அதிருப்தியடைந்த நான், படிப்படியாக இம்மையிலும் மறுமையிலும் உள்ள வாழ்வைப் பற்றி முஸ்லிம் அல்லாதார் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சுயமாகக் கற்றறியத் தீர்மானித்தேன். பிறருடைய வற்புறுத்தல் இன்றி முழுக்க முழுக்க என் சொந்த முயற்சியினால், இஸ்லாமிய பார்வையால் ஒரு வட்டத்திற்குள் இருந்த என் பரிமானத்தை விஸ்தரிக்க‌ முயற்சி எடுத்தேன். இறை மறுப்புக் கொள்கையை ஒரு காலத்தில் அணுசரித்து, பின்னர் ஏதாவது ஒரு மத‌ நம்பிக்கையைப் பற்றிக் கொண்ட நபர்களின் எழுத்துக்களில் நான் ஈடுபாடு காட்டினேன்.

 
இவர்களில், இங்கிலாந்திலுள்ள‌, ஆக்ஸ்பார்ட் பல்கலைக் கழக தத்துவ ஞானியான சி.எஸ் லூயிஸ் (C.S.Lewis) குறிப்பிடத் தகுந்தவர். இறை மறுப்பு கொள்கை உட்பட, நித்திய வாழ்க்கை, தெய்வத் தன்மை போன்ற விவகாரங்களில் அவர் அறிவுப் பூர்வமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் அதிகம் போராடியிருக்கிறார். முன்னால் நாத்தீகன் என்ற முறையில் கிறிஸ்தவத்தையும் பிற சமயங்களைப் பற்றியும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இறுதியில் நாத்தீகத்தை நிராகரித்து விட்டு கிறிஸ்தவத்தைத் தழுவினார். இறுதியில், தனக்கு உண்டான ஆர்வத்தை அடிப்படியாகக் கொண்டு கிறிஸ்தவ சித்தாந்தத்தின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனையில் உள்ள நியாயத்தைப் பற்றி, நம்பகத்தன்மையைப் பற்றியும் பல ஆய்வு நூல்களை லூயிஸ் எழுதியுள்ளார்.

 
"வெறும் கிறிஸ்தவம்(Mere Christianity)" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய நூல் என்னைக் கவர்ந்த ஒன்று. அதன் மையக் கருத்தும், அதன் விளக்கமும், வர்ணனையும் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக நான் எதிர்நோக்கி வந்த கேள்விகள் ஆன்மீக உண்மைகள் போன்ற சவால்களுக்கு அந்நூல் பதிலளித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகு, நான் நேர்மையான முறையில் சொந்தமாக கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றியும், நாங்கள் சைய்யதினா ஈஸா அல் மஸீஹா(Sayidina Isa Al-Masih) என்றுச் சொல்லும் இயேசு கிறிஸ்துவின் முழு போதனைகளையும் ஆராயத் தொடங்கினேன்.

 
இறுதியில் இறைவனின் உண்மையான அன்பை விவரிக்கும் சுவிசேஷப் பகுதியைக் கண்டேன். அந்த வசனம் வறுமாறு...
 
 
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

"For GOD so LOVED the World, that He gave us His one and only Son, so that all who believe in him should not perish (be destroyed) but would have everlasting life.."(யோவான் 3:16).
 
 
இதுதான் நான் தேடிவந்த உண்மையான தெய்வ அன்பின் வெளிப்பாடு ஆகும். ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாத தெய்வ அன்பைப் பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைதிலிருந்து இது எவ்வளவு முரண்பட்டிருகிறது! கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை! கடவுள் தமது மனைவியை அறிந்ததால் தான் இந்தக் குமாரன் பிறந்தார் என்று வேதாகமமோ அல்லது நற்செய்தி நூல்களோ போதிக்கவில்லை. துரதிஷ்டவசமாக, குர்ஆனில் காணப்படுகின்ற அடிப்படை இல்லாத‌ ஒரு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக வீசப்படுகிற ஒரு கடுமையான ஆனால் மேம்போக்கான குற்றச்சாட்டு இதுவாகும். இது கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சந்தேகத்தையும் விரோதத்தையும் வளர்த்துவிடுகிறது.

 
 
பைபிளில் விளக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவம் சரீரப் பூர்வமாகவோ உடலுறவு மூலமாகவோ உண்டானதன்று. கிறிஸ்தவர்கள் கூட இஸ்லாமியர்கள் கருதுவது போல‌ தவறான புரிந்துக்கொள்வதில்லை. உண்மையில், அறிவார்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கூறும் இந்த உடலுறவுக் கொள்கையை முன் நின்று எதிர்ப்பார்கள். இந்த கோட்பாடு, கிறிஸ்தவ சுவிசேஷங்களில் காணப்படவும் இல்லை.

 
மலாய் மொழியில், நாங்கள் "நதியின் மகன் - son of the river (Anak Sungai)", "சாவியின் மகன் - son of the key (Anak Kunci)", "நிலவின் குழந்தை - child of the Moon (Anak Bulan)" மற்றும் இது போல அனேக வகைகளில் வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இவைகள் நீரோடையையும், சாவிக் கொத்தையும், இளம் பிறையையும் குறிப்பிடுகிறது. அனாக்(Anak) என்ற சொல்லுக்கு மகன்(Son) என்ற பொருள் ஆகும். "மகன்" என்ற வார்த்தை வருவதினால், சரீர சேர்க்கையினால்(உடலுறவினால்) தான் ஆற்றிலிருந்து நீரோடை பிரிகிறதா? உடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதா? அல்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா? இப்படியா இதற்கு நாம் பொருள் கூறுவோம், நிச்சயமாக இல்லை!

 
 
நாங்கள் "சைய்யதினா ஈஸா அல்-மஸீஹ்" என்றுச் சொல்லக்கூடிய‌ இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டான எல்லையில்லாத கிருபையையும் ஆசிர்வாதத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன். இதை நான் பரிபூரணமாக முழுமனதோடும் சொல்கிறேன். இன்று எனது குடும்பத்தார் அனைவரும் மனித இனத்திற்கு ஜீவனுள்ள வார்த்தையாகிய கர்த்தரின் நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் அனுபவித்து வருகிறோம். பைபிளில் கூறப்பட்டுள்ள சைய்யதினா ரப்பானி ஈஸா அல் மஸீஹாவின் வார்த்தைகளைக் கைக் கொள்வதில் இப்போது எங்களுக்கு இந்தப் பிரச்ச‌னையும் ஏற்படவில்லை. இது எங்களுக்குக் கிடைத்த சிலாக்கியமே.

 
 
"வெறும் கிறிஸ்தவம்" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய வரிகளை முன் வைத்து எனது சாட்சியை முடிக்கிறேன்.

 
 
கிறிஸ்தவம் மனிதனால் உண்டாக்கப்பட்ட சமயம் என்றால், நிச்சயமாக அதன் விதிகளை சுலபமாக்கியிருக்க‌ முடியும். ஆனால், அது உண்மையல்ல. மதங்களை உருவாக்கும் மனிதர்களோடு, நாம் எளிமையை ஒப்பிடமுடியாது. அது எப்படி முடியும்? நாம் உண்மை நியதிகளை சந்திக்கிறோம். இயல்பாகவே, ஒருவன் எளிமையாக வாழ விரும்பினால் வாழலாம், அவன் எந்த நியதி பற்றியும் கவலைப்படாதவனாக இருந்தால்.

"If Christianity was something we were making up, of course we could make it easier and simpler. But it IS NOT. We cannot compete, in simplicity, with people who are inventing religions. How could we? We are dealing with Fact. Of course anyone can be simple if he has no facts to bother about."

C.S.Lewis, Mere Christianity (New York, The Macmillan Company, 1943, Page 145)
 
 
உங்களுடைய சவாலுள்ள ஆர்வத்தை ஜீவிக்கின்ற மெய்யான தேவன் தமது அளவில்லாத கிருபையால் ஆசீர்வதிப்பாராக!

 
இப்படிக்கு
ஷரபுத்தீன்

 
குறிப்பு:

"வெறும் கிறிஸ்தவம்" என்ற நூலை இணையத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்.


இதர சாட்சிகளை தமிழில் படிக்க
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்


© Answering Islam, 1999 - 2009. All rights reserved.