Sunday, November 9, 2008

குரான் முரண்பாடுகள்-2

Posted on 12:50 AM by justdial


அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82

ஆபிரகாம் மக்காவிற்கு இஸ்மவேலோடு வந்தார், அங்கு காபாவை புதுப்பித்தார் என்ற குர்-ஆனின், ஹதீஸ்களின் வாதத்திற்கு இதுவரையில் எந்த சரித்திர ஆதாரமும், அகழ்வாராச்சி ஆதாரமும் இல்லை.



1. ஊர் என்ற தேசத்திலிருந்து, பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு போகும்படி சொன்ன அல்லா, ஏன் பிறகு இங்கிருந்து மக்காவிற்கு போகச்சொல்கிறார்?

2. 100 வயதுள்ள ஆபிரகாம், ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஆகாரோடு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மக்காவிற்கு பாலைவனத்தில் எப்படி சென்றார் என்பது தான் ஆச்சரியம். ஒரு பாம்பு வழிகாட்டியதோ?

3. மக்காவில் தீர்க்கதரிசனம் உரைத்து, மக்கா மக்களை நேர்வழியில் நடத்துவதற்காகவா?

4. இவர்கள் காபாவை புதுப்பிக்கும்போது மக்காவில் யாரும் வாழவில்லை. ஒரு மனிதனும் இல்லை. ஊரிலே யாரும் இல்லாத போது, அங்கு காபாவை பாதுகாக்க அல்லது ஒரு பொருப்பாளியாக இஸ்மாயில் எதற்கு? கி.மு. 2000 லிருந்து கி.பி வரை மக்காவில் மனித நடமாட்டம் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது.


Tabari VI:52 "The Ka'aba had not had any custodians since its destruction in the time of
Noah. Then Allah commanded Abraham to settle his son by the Ka'aba, wishing thereby to
show a mark of esteem to one whom he later ennobled by means of his Prophet Muhammad."
"Abraham and his son Ishmael were custodians of the Ka'aba after the time of Noah. At the time, Mecca was uninhabited…."


இஷாக், மற்றும் டபரி போன்றவர்களின் தொகுப்பில் இதைப்பற்றிச் சொல்லியுள்ளது. ஆனால் நீர் சொன்னது போல எந்த ஹதீஸிலும் இல்லை. புகாரி ஹதீஸிலும் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இல்லை. (ஷகீனா வழிகாட்டியதாக வரும் செய்தி)

No Response to "குரான் முரண்பாடுகள்-2"