Showing posts with label கிறிஸ்தவம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவம். Show all posts

Saturday, July 18, 2009

குரான் முரண்பாடுகள்-44

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
 
இயேசுவின் பிறப்பு அறிவிப்பின் போது மரியாளின் கேள்வி
(கீழ்கண்ட வசனங்களில் ஆங்கில வார்த்தைகளை நாம் இட்டுள்ளோம்)
3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன்(Walad) உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது." 
19:20 அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்(Ghulam) உண்டாக முடியும்?" என்று கூறினார். 

 

 
 
 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, July 15, 2009

குரான் முரண்பாடுகள்-42

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
தேவ தூதரிடம் ஜகரியா பேசுகிறார்
3:40 அவர் கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான். 
19:8 (அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?" எனக் கூறினார். 

 

 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tuesday, July 14, 2009

குரான் முரண்பாடுகள்-41

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
ஸமுது கூட்டத்தாரை ஸாலிஹ் எச்சரிக்கிறார்
7:73 ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார். 
11:64 "அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்). 
26:154-155 அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."  "இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்." 

 

 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, June 8, 2009

குரான் முரண்பாடுகள்-40

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
 
 
இஸ்ரேல் மக்களுக்கு கட்டளைகள்
2:58 இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்;மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். 
7:161 இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம்.நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது. 

 

 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday, February 1, 2009

வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா?

 

More is Better?

மற்ற மார்க்கங்களை விட இஸ்லாம் தான் உண்மையானது மற்றும் சிறப்பானது என்பதை நிருபிப்பதற்காக இஸ்லாமியர்கள் சொல்லும் ஒரு "ஆதாரம்" இது தான், அதாவது "உலகின் பல பாகங்களில் இஸ்லாம் மிகவும் வேகமாக வளருகிற மதமாக இருக்கிறது". இந்த வாதம் கீழ் கண்ட விதமாக அமைந்துள்ளது.

வாதம்:

மற்ற எல்லா மதங்களை விட இஸ்லாம் தான் உண்மையானது

இதற்கு ஆதாரம்:

இஸ்லாம் தான் மிகவும் வேகமாக வளருகிற மதமாக உள்ளது

முடிவு/ஊக‌ம்:

வேகமாக வளருகிற மதம் தான் உண்மையான மதமாக இருக்கிறது

 ---

Claim:

Islam is superior to all other religions

Support:

Islam is the fastest growing religion

Warrant/ Assumption:

The fastest growing religion is the superior religion

இந்த‌ வாத‌த்தின் மூல‌ம் கிடைத்த "முடிவு" விவாத‌த்திற்கு உட்ப‌ட்ட‌து, ம‌ற்றும் இத‌ற்கு ச‌ரியான‌ சான்று த‌ர‌ப்ப‌ட‌வேண்டும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்கள் பதில் சொல்லியாக வேண்டும், அதாவது:

"வேகமாக வளருகிற மதம் தான் மற்ற மதங்களை விட சிறந்தது/உண்மையானது என்று நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்?

why do you believe that the fastest growing religion is the superior religion?
"

இக்கேள்விக்கான‌ ப‌தில் குழ‌ப்ப‌முள்ள‌தும், இதற்கு இன்னும் அனேக ஆதாரங்கள் தேவையாயும் உள்ளது. நான் இதுவரை எந்த முஸ்லீமிடமிருந்தும் இக்கேள்விக்கான சரியான பதிலை பெறவில்லை. இப்போதாவது, இக்கேள்விக்கான சரியான பதிலை இஸ்லாமியர்கள் சிந்தித்து தரும்படி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். முஸ்லீம்கள் பதிலை கொடுப்பதற்கு முன்பாக, இந்த வாதத்தில் உள்ள பிரச்சனைகளை நான் உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன்.

1. மேற்கத்திய நாடுகளில் மெக்டொனால்ட்சஸ்(McDonalds) என்ற துரித உணவகம், மிகவும் வேகமாக வளருகிறது. பெரும்பான்மையாக ஒவ்வொரு சிறிய பட்டணத்திலும் இந்த மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகம் இருக்கும். உண்மையைச் சொல்லப்போனால், இந்த உணவகத்தின் உணவுகளில் அவ்வளவு அதிகமாக ருசி இருப்பதில்லை. இப்படி இருந்தும் இந்த மெக்டொனால்ட்ஸ் ஏன் இவ்வளவு வேகமாக வளருகிறது என்று அனேகருக்கு புரியாத புதிராகவே உள்ளது. மெக்டொனால்ஸ் அமோகமாக வளர்ந்துள்ளது, இதற்கு காரணங்கள் இவைகளாகும், உணவுகளின் விலை மிகவும் மலிவானது, வேகமாக பரிமாறப்படுகிறது, குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான வசதிகள் அங்கு அதிகமாக இருக்கிறது, மற்றும் உணவுகள் அவ்வளவு ருசி குறைவாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் குறைந்ததாக இருந்தாலும், "இவ்வுணவுகள் நமக்கு வேண்டாம் என்றுச் சொல்லும் அளவிற்கு மோசமாக இல்லை" என்பதாலும் இவ்வுணவகங்கள் வேகமாக வளருகிறது. ஆக, இதே போல உள்ள காரணங்கள் இஸ்லாமுக்கும் பொருந்தக்கூடியவைகளாக இருக்கும்.

2. வைரஸ்கள் என்றுச் சொல்லக்கூடிய நுண்ணுயிர்கள் ஒரு உயிரினத்தில்(உடலில்) நுழைந்த உடன் அவைகள் மிகவும் வேகமாக வளருகின்றன, மற்றும் அதிக வேதனையை உண்டாக்கி விடுகின்றன. விஷயம் இப்படி இருப்பதினால், மனிதனை விட வைரஸ்கள் சிறப்பானவைகள் என்று பொருள் கொள்ளமுடியுமா? வளரும் வேகத்தைக் கண்டு வேண்டுமானால் வைரஸ்கள் நம் உடலை விட சிறப்பானது என்றுச் சொல்லமுடியுமே தவிர, வைரஸ்கள் நம்மைக் காட்டிலும் அறிவிலும், சிந்திக்கும் ஆற்றலிலும், ஆன்மீகத் தன்மையிலும் சிறப்பானது என்றுச் சொல்லமுடியுமா? சொல்லமுடியாது என்பது தான் உண்மை. இன்னும் சில வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வகையான உயிரினங்களில் இன்னும் அதிகமாக வளருகிறது என்பதை நாம் அறிவோம்.

3. மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரமும், முதலாளித்துவமும்(Western culture and Capitalism) இஸ்லாமிய நாடுகளில் அதிகமான வேகத்தில் வளர்ந்து வருகிறது. அப்படியானால், இஸ்லாமிய கலாச்சாரத்தை விட மேற்கத்திய கலாச்சாரம் மிகவும் சிறந்தது/உயர்ந்தது என்றுச் சொல்லமுடியுமா? மேற்கத்திய தொலைக்காட்சி சானல்கள், தொழில் நுட்பங்கள், இசை, திரைப்படங்கள் போன்றவைகள் இஸ்லாமிய நாடுகளில் தங்கள் பாதத்தை பதித்து, வேகமாக வளர்ந்து வருகின்றன. இஸ்லாமிய கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. இஸ்லாமியர்கள் சொல்லும் வாதங்களின் அடிப்படையில், "மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவம் போன்றவைகள், அல்லாஹ்வினால் உண்டாக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரத்தை விட சிறந்தது/மேன்மையாது என்று கண்டிப்பாக‌ச் சொல்லலாம்".

இப்படிப்பட்ட கணக்கிலடங்கா உதாரணங்களை என்னால் தரமுடியும். வேகமாக வளருவது தான் மற்றவைகளை விட மேன்மையானதாக/உண்மையானதாக இருக்கும் என்ற வாதம் எவ்வளவு மடமையாக உள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இஸ்லாம் இங்கும் அங்குமாக‌ வ‌ள‌ர‌லாம், இஸ்லாமைப்போல‌ மெக்டொனால்ஸ்ஸும் வ‌ள‌ருகிற‌தே, அவ்வ‌ள‌வு ஏன், எயிட்ஸ் என்ற‌ வியாதி கூட‌ வேக‌மாக‌ ப‌ர‌வுகிற‌தே! இஸ்லாம், மெக்டொனால்ஸ், ம‌ற்றும் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளி நோய், இவைக‌ள் அனைத்தும் வேக‌மாக‌ வ‌ள‌ருகிற‌து என்ப‌தால், ம‌ற்ற‌வைக‌ளை விடை இவைக‌ள் சிற‌ந்த‌து என்றுச் சொல்ல‌முடியுமா? ஒரு மார்க்க‌ம் உண்மையான‌தாக‌ இருக்கிற‌து என்ப‌த‌ற்கு, "வேக‌மாக‌ வ‌ள‌ருவ‌து" ஒரு ஆதார‌மாக‌ இருக்க‌முடியுமா?

****

இப்போது நீங்கள் என் மீது குறைகூறுவீர்கள், இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது, ஆப்பிளையும், ஆரஞ்சுப் பழத்தையும் ஒப்பிடுவதற்கு சமம் என்றுச் சொல்வீர்கள். மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மக்களின் வளர்ச்சி விகிதம் மற்ற மதங்களை விட இம்மதம் சிறந்தது என்பதை காட்டும் அளவுகோளா?

கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்காவில் இஸ்லாமின் வளர்ச்சியை விட‌ மற்ற மதங்கள் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளன. 1991 லிருந்து 2001 வரையுள்ள 10 ஆண்டுகளில்( World Almanacன் படி) அமெரிக்காவில் 6 மில்லியன் முஸ்லீம்கள் இருந்திருக்கிறார்கள். இந்த 10 ஆண்டுகளில், யோகோவா விட்னஸ் என்ற மதத்தவர்கள் 26% வளர்ச்சி அடைந்துள்ளார்கள். யூனிடேரியன் என்பவர்கள் 20% வளர்ச்சி அடைந்துள்ளார்கள், மர்மோன்ஸ் என்ற பிரிவினர் 18% வளர்ச்சியடைந்துள்ளார்கள். இஸ்லாமியர்களின் வாதத்தின் படி, அமெரிக்காவில் இஸ்லாமை விட யேகோவா விட்னஸ், யூனிடேரியன் மற்றும் மர்மன்கள் வேகமாக வளர்ந்துள்ளார்கள், இதன் படி பார்த்தால், இஸ்லாமை விட இந்த மார்கங்கள் தான் உண்மையான மார்க்கங்கள் என்று உலக இஸ்லாமியர்கள் நம்மை நம்பச் செய்கிறார்கள், அப்படித்தானே! இப்போது இஸ்லாமியர்கள் World Almanac என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பை நாங்கள் நம்பமாட்டோம், ஏனென்றால், இந்த நிறுவனம் சியோன்காரர்களால் நடத்தப்படுகிறது என்று பதில் சொல்வார்கள். எந்த கணக்கெடுப்பும் புள்ளிவிவரங்களும் இஸ்லாமியர்களின் வாதத்திற்கு எதிராக இருக்குமானால், உடனே "கிறிஸ்தவர்கள் யுதர்களின் இரகசிய சூழ்ச்சி இது(Christian-Zionist Conspiracy Theory)" என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் இஸ்லாமியர்கள், சரி தானே!

Source: www.answering-islam.org/Assumptions/moreisbetter.htm

Thursday, January 29, 2009

புதுவிதமான யானைக் கதை



 

நண்பர் உமர் அவர்கள் இந்த கட்டுரை எழுதக்காரணமாக இருந்தது ஏகத்துவம் என்ற இணையத்தில் வந்த கட்டுரையாகும்.அதை அறிந்துகொள்ள http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=27916#27916 
 
 
 
உமர் அவர்களில் பதில் கட்டுரை
 
என்னுடைய இந்த பதிவு, பல கட்டுரைகளை படித்து சேகரிக்கப்பட்ட விவரங்களாகும். இங்கு முன் வைக்கப்படும் தொடுப்புக்களுக்குச் சென்று மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.

1. குர்‍ஆன் 105ம் அதிகாரம் "யானை".

 
Quote:
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? (105:2) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3) சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5).


சிறு குறிப்பு: யெமன் என்ற நாட்டில் (எத்தியோப்பியா) ஒரு பெரிய சர்ச் அதாவது கிறிஸ்தவ சபையை ஒரு அரசன் அப்ரஹா கட்டினானாம், எல்லாரும் அவ்விடம் வந்து தொழுதுக் கொள்ள கட்டாயப்படுத்தினானாம், இன்னும் அனேக செயல்களைச் செய்தானாம். மக்காவிலிருந்து ஒரு மனிதன், அந்த சர்சை அசுசிப்படுத்தி, கெடுத்துவிட்டானாம், அதற்காக காபாவை அழிப்பதற்காக, யெமன் என்ற நாட்டிலிருந்து, அப்ரஹா என்பவர் பல யானைகளோடு, 60,000 ஆயிரம் இராணுவத்தோடு மக்காவிற்கு வந்தாராம், அப்போது காபாவை காப்பாற்ற அல்லாஹ், பறவைகளை அனுப்பி, சூடான கற்களை அவர்கள் மீது எரிந்து கொன்றாராம்.(http://www.al-islam.org/lifeprophet/4.htm)




2. கிறிஸ்தவர் கேட்டார் என்று முன்வைக்கப்பட்ட கேள்வி:

 
Quote:
கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.


இந்த கேள்வியை சிறிது மாற்றி கேட்டு இருக்கவேண்டும். யானைகள் அக்காலத்தில் உலகில் எங்கும் இல்லை என்பது சரியாகாது, இந்நாடுகளில் (எத்தியோப்பியாவில்) மனிதர்கள் யானைகளை பயன்படுத்தினார்களா? அல்லது குறைந்த பட்சம் போரிலாவது பயன்படுத்தினார்களா? என்று கேட்டு இருக்கவேண்டும்.


3. முஹம்மதுவின் காலத்தில் எத்தியோப்பியாவில் யானைகளை போரில் பயன்படுத்தினார்களா?


யானைகள் ஆப்ரிக்காவில் இருந்திருக்கும், ஆனால் மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்தினானா? என்பது தான் கேள்வி?

முஹம்மதுவின் காலத்தில் எத்தியோப்பியாவில்(ஆப்ரிக்காவில்) யானைகளை மனிதன் பயிற்சி கொடுத்து பயன்படுத்தவில்லை என்று எத்தியோப்பிய பல்கலைக் கழக பேராசியர்கள் கூறியுள்ளார்கள்.



 
Quote:
The Problem

There is only one problem. Elephants in Africa, including Ethiopia, were never domesticated and used by humans. By "Never", I mean throughout history. I came to know this fact through talking with three Ethiopian university professors. True, elephants were and still are domesticated and used for labor in Southeast Asia, but never in Africa.

Source: http://www.islam-watch.org/Kammuna/Quran-Sura-Alfeel-A-Myth.htm



4. குர்‍ஆன் சொல்வது போல, யானைகளோடு அப்ரஹா மன்னார் வந்ததாக நினைத்தாலும் கீழ் கண்ட பிரச்சனைகள் புதிதாக உருவாகின்றன.

4.1 யெமன் நாட்டிலிருந்து மெக்காவிற்கு இடையே உள்ள தூரம் : 500 மைல்கள்


குர்‍ஆன் சொல்வது போல, யானைகளோடு அப்ரஹா அரசர் வந்தார் என்ற விவரம் மற்றும் அல்லா பறவைகள் மூலமாக அவர்களை விரட்டியடித்தார் என்பதை ஏற்றுக்கொண்டால், பல பிரச்சனைகள் வருகின்றன. யெமன் நாட்டிலிருந்து மெக்காவிற்கு நேர்க்கோட்டில் தூரத்தை கணக்கெடுத்தால் 500 மைல்கள் இருக்கின்றன, அதாவது, 800 கிலோமீட்டர் தூரம் உள்ளது. காடு மலைகள், போன்றவற்றிலும் நடந்து நேரடியாக வந்தால் தான் இவ்வளவு தூரம் இருக்கும், ஆனால், தடைகளை சுற்றி வரவேண்டுமானால் இன்னும் தூரம் அதிகமாகும்.



Miles: 507.97
Kilometers: 817.47
Source: http://www.mapcrow.info/Distance_between_Sanaa_YM_and_Mecca_SA.html



இதனை கவனத்தில் கொண்டு அடுத்த விவரத்தை படிக்கவும்.

4.2 எத்தனை யானைகளோடு, இராணுவத்தோடு மெக்காவிற்கு வந்தார்?


அப்ரஹா மன்னர் 9 அல்லது 13 யானைகளோடும், 60,000
இராணுவத்தோடும் மக்காவிற்கு வந்தாராம்.


 
Quote:
So, in 570 or 571 A. D., he took 60,000 troops and 13 elephants (according to another tradition, 9 elephants) and set off for Makkah.

Source : Syed Maududi's Commentary for Surah #105

http://www.islamicity.com/Mosque/QURAN/maududi/mau105.html


இந்த விவரத்தையும், கவனத்தில் கொண்டு அடுத்த விவரத்தை படிக்கவும்.


4.3 யானைகளின் தேவைகளாகிய உணவு, தண்ணீர், பயணிக்கும் தன்மைகள் பற்றிய குறிப்பு:


இப்போது யானைகள் பற்றிய விவரங்களை கவனிப்போம்.


ஒரு ஆரோக்கியமான யானை தினமும்:


189 லிட்டர் (50 gallons) தண்ணீர் குடிக்கும். (http://www.jstor.org/pss/294124 )


• உணவு கிடைக்காத பட்சத்தில், உணவிற்காக ஒரு நாளுக்கு 50 மைல்கள் ஒரு யானை பயணிக்குமாம். (http://www.sandiegozoo.org/wordpress/default/how-far-do-elephants-walk-in-one-day/)


• 300 லிருந்து 350 Pound(159 Kilograms) அளவுள்ள உணவை ஒரு யானை ஒரு நாளுக்கு உண்ணுமாம்.( http://www.jstor.org/pss/294124)


• யானைகள் ஒரு நாளில் 16 மணி நேரம் சாப்பிடுவதற்கு செலவிடுமாம்.( http://en.wikipedia.org/wiki/Elephant)

யானைகளின் உடலில் வியர்வை சுரப்பிகள் இருப்பதில்லை, எனவே, தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, அவைகள் சேறு மற்றும் தண்ணீர் உள்ள இடங்களில் அதிக நேரம் செலவழித்து, சேற்றை வாறி தங்கள் உடல்களில் போட்டுக் கொள்கின்றன.





4.4 யெமனிலிருந்து மெக்காவிற்கு வர ஒரு யானையின் தேவை:


யெமனிலிருந்து மெக்காவிற்கு நேர்க்கோட்டிலேயே பயணம் செய்ததாக நாம் கற்பனை செய்துக் கொண்டாலும், 500 மைல்கள் கடக்கவேண்டும், அப்படியானால்:


ஒரு நாளுக்கு 50 மைல்கள் ஒரு யானை பயணித்தால், 500 மைல்களை
கடக்க 10 நாட்கள் ஆகும். அதாவது :


தண்ணீர்: 189* 10 = 1890 லிட்டர் தேவை

உணவு: 159 * 10 = 1590 பவுண்ட்கள் தேவை


[16 மணி நேரம் உணவிற்காக மட்டும் யானை செல்வழித்தால், இவ்வளவு
தூரம் (50 Miles) செல்லமுடியாது, அதே நேரத்தில் தன்னை குளிர்ச்சியாக்கிக் கொள்ள பாலைவனத்தில் யானைக்கு வசதி இருக்காது. இதனால், தொடர்ந்து போகமுடியாமல், 500 மைல்கள் கடக்க 10 நாட்கள் அல்ல அதற்கும் அதிகமாகவே தேவைப்படும். அதுவும் விமானம் போல, நேர்க்கோட்டில் பயணித்தால் தான், மேடு பள்ளங்களை சுற்றிச் செல்லவேண்டுமானால், பாலைவன மணலில் செல்லவேண்டுமானால், இன்னும் கால தாமதம் ஆகும். அந்த அரசனோடு வந்த இராணுவனும் யானைகளைப் போல வேகமாக ஒரு நாளுக்கு 50 மைல்கள் நடக்கமுடியாது]


ஒரு யானைக்கே இவ்வளவு தண்ணீர், உணவுகள்(இலைகள் etc..) தேவைப்படுமானால்,

9 or 13 யானைகளுக்கு எவ்வளவு தேவைப்படும்? ஒரு பேச்சுக்கு 10 யானைகள் என்றே வைத்துக் கொண்டாலும்,

தண்ணீர் : 1890 * 10 = 18, 900 லிட்டர் தேவை

உணவு: 1590 * 10 = 15, 900 பவுண்ட்கள் தேவை



இவ்வளவு உணவுப்பொருட்களை வைத்துக் கொண்டு போருக்கு வரமுடியுமா? இது சாத்தியமா? வாசகர்கள் சிந்திக்கட்டும்.





4.5 60,000 இராணுவத்தோடு வந்தாராம்:

யானைகள் மட்டுமல்ல, 60, 000 (அறுபது ஆயிரம்) இராணுவத்தோடு வந்தாராம்? இத்தனை பேருக்கு உணவு எப்படி பாலை வனத்தில் கிடைக்கும், இவர்களுக்கு தண்ணீர் எப்படி கிடைக்கும்? மட்டுமல்ல், பாலைவன வெயிலில் யானைகளானாலும் சரி, மனிதர்களானாலும் சரி, தினமும் அதே வேகத்தில் நடக்கமுடியாது?


இவைகள் தான் குர்‍ஆன் 105ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட விவரங்களின் சாத்தியக் கூறுகள்.



4.6 யானைகளைக் கொண்டு நடத்தப்பட்ட போர்களின் பட்டியல்:

• ….
• ….
• 190 BC, Battle of Magnesia
• 167 BC-160 BC, Revolt of the Maccabees
• 164 BC, Battle of Beth-zur
• 153 BC, Roman siege of Numantia (Spain)
• 149 BC-146 BC, Siege of Carthage
• 108 BC, Battle of Muthul
• 46 BC, Battle of Thapsus
• AD 451, Battle of Vartanantz
• 636, Battle of al-Qādisiyyah
• 738, Battle of Rajasthan
• 1214, capture of Cremona by Frederick II, Holy Roman Emperor
• 1659, Battle of Khajwa
• 1526, First Battle of Panipat
• 1556, Second Battle of Panipat
• 1761, Third Battle of Panipat


Source : http://en.wikipedia.org/wiki/List_of_battles_involving_war_elephants




இந்த மேலே உள்ள பட்டியலில், கி.பி. 570 நடந்த யானைப்போர் தென்படுகிறதா பாருங்கள். அடுத்த முறை, கண்டிப்பாக குர்‍ஆன் 105ம் அதிகாரத்தின் யானைப்போரும் கட்டாயமாக சேர்த்துவிடுவார்கள்.

எத்தியோப்பியா அரசர் இருந்தது உண்மைத் தான், ஆனால், யானைகளோடு வந்தாரா? என்பது தான் இப்போது சந்தேகம். மேலே உள்ள அனேக பிரச்சனைகள் விடையளிக்கப்பட்டால் தான் சந்தேகங்கள் தீரும்.

இங்கு ஒரு விவரம் குறிப்பிடவேண்டும், அல்லா 360 விக்கிரகங்கள் உள்ள காபாவை, குரைஷி மக்களுக்காக ஏன் காப்பற்றவேண்டும்? அதுவும் வேதம் அளிக்கபப்ட்டவர்களை (கிறிஸ்தவர்களை) அழித்து, விக்கிரகங்களை வணங்கும் குரைஷிகளை காப்பாற்ற வேண்டிய‌ அவசியமென்ன? அப்ரஹா மன்னன் மக்காவை நெருங்கும் போது, காபாவை காப்பற்றும் படி, அல்லாவிடம் வேண்டிக் கொண்டார்களாம் மக்கா மனிதர்கள். மக்காவில் இருந்த அந்த 360 கற்களில் ஒரு கல் கண்டிப்பாக அல்லாவாக இருந்திருப்பார் இல்லையா?


அந்த ஆண்டில் தான் முஹம்மது(A.D 570) பிறந்தாராம், ஒரு சிலர் கூறுகிறார்கள், அந்த அரசன் போர் தொடுத்த ஆண்டு கி.பி. 552ம் ஆண்டு ஆகும். 552ம் ஆண்டு முஹம்மது பிறந்திருந்தால், தனக்கு 70 வயதான போது தான் அவர் ஆயிஷாவை(6 வயது சிறுமியை திருமணம்) செய்திருக்கவேண்டும், 50 வயதாகும் போதல்ல, இது இன்னும் பெரிய சிக்கலை உண்டாக்குகிறாது (Prophet of Doom, Page 112, and 113)

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.


இது மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் குர்‍ஆனில் விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க மிகவும் அதிகமாக உழைக்கிறார்கள், அதனால், தான் இப்படியான எழுதுகிறார் ஒரு இஸ்லாமிய அறிஞர்:


 
Quote:

திருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்று. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா? என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5)





இதை எழுதியவர், நம் அருமை இஸ்லாமிய அறிஞர், பிஜே அவர்கள் தான், அவரது குர்‍ஆன் மொழிபெயர்ப்பில் இப்படி எழுதியுள்ளார்.

இந்த யானை விவரம் பற்றி இப்போதைக்கு இவ்வளவு விவரங்கள் தான்.

ஆக, யானைகளை எத்தியோப்பியாவில் போரில் அக்காலத்தில் பயன்படுத்தினார்களா என்பதை முதலில் விளக்கப்படவேண்டும், இரண்டாவது, அப்படி பயன்படுத்தினாலும், அவ்வளவு தூரம், அத்தனை பேர்களோடு பாலைவனத்தில் வருவது என்பது முடியாத காரியம். அப்படி வந்தார்கள் என்றுச் சொன்னால், எப்படி வந்தார்கள், மற்றும் மேலே நாம் கண்ட கேள்விகளுக்கு பதில்கள் தரப்படவேண்டும்.

References:
http://www.answering-islam.org/Responses/Saifullah/rahman_av.htm#elephants
http://www.elephant.se/elephant_foot_and_nail_problems.php
http://www.jstor.org/pss/294124
http://www.sandiegozoo.org/wordpress/default/how-far-do-elephants-walk-in-one-day/
http://en.wikipedia.org/wiki/Elephant
http://www.onlinepj.com/vilakkam/vilakkam8.htm
http://www.mapcrow.info/Distance_between_Sanaa_YM_and_Mecca_SA.html
http://en.wikipedia.org/wiki/List_of_battles_involving_war_elephants

இத்தொடுப்புக்களில் சென்று படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
 

Tuesday, January 27, 2009

குரான் முரண்பாடுகள்-25

ஒரே நிகழ்ச்சியில் வரும் "நேரடி பேச்சுக்களில்" உள்ள வித்தியாசங்கள்


Variant "direct speech" quotations from the same incidents:


கீழே தரப்பட்ட நிகழ்ச்சி விவரங்கள் "நடந்துவிட்ட‌ நிகழ்ச்சியைப்" பற்றியது தான். அவைகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மை வாய்ந்த சரித்திர நிகழ்வுகளாகும்(உதாரணத்திற்கு, அல்லா ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து அனுப்பியது ஒருமுறைத் தான், அல்லா மோசேயை எரியும் புதரிடம் சந்தித்தது ஒரு முறை தான்...). ஆக என்ன நடந்தது என்பதற்கு? ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு. ஆனால், குர்‍ஆனில் உள்ள பல சூராக்களில், இருவருக்கும் அல்லது அனேகருக்கும் இடையே நடந்த பேச்சு உரையாடலை இரண்டு/மூன்று வித்தியாசமான முறையில் குர்‍ஆன் சொல்கிறது. இவைகள் அனைத்தும் "நேரடி உரையாடல் பேச்சுக்கள்-all 'direct speech' quotations" தான், இவைகள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குர்‍ஆனில் வித்தியாசமாக உள்ளது. உண்மையில் இந்த மேற்கோள்களில் பேசுபவர் "பேசிய வார்த்தைகள்" எது? அவைகளில் எந்த விவரம் சரியானது?
 
 
ஆதாமைப் பற்றி தூதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை
 
2:34 ... "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது... 15:29 ..., "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! 
 
 
 
Source: http://www.answering-islam.org/Authors/Peters/misquotations.pdf
Source Tamil: http://www.answering-islam.org/tamil/authors/peters/misquotations.htm

 
 
 ஏகத்துவத்திற்கு ஈஸா குர்‍ஆன் அளித்த இதர மறுப்புக்களை படிக்க: 

பாகிஸ்தான் பெண்: நான் ஒரு முஸ்லீமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்

 
-----------------------------------
 
 
கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்:

சுவிசேஷத்தின் தேவை இஸ்லாமியர்களுக்கு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு இயேசு என்னும் சத்தியத்தை நாம் சொல்லவில்லையென்றால், அவர்கள் ஒரு நாள் இஸ்லாமின் உண்மை முகத்தை அவர்களாகவே கண்டுபிடித்து, நாத்தீகர்களாக மாறிவிடுகிறார்கள்.

இதோ இஸ்லாமின் உண்மை முகத்தை க‌ண்டுக்கொண்ட ஒரு பாகிஸ்தான் இஸ்லாமிய பெண், எப்படி இஸ்லாமை விட்டுவெளியேறுகிறார் என்பதை விவரிக்கிறார். இந்த‌ ச‌கோத‌ரி சொல்லும் விவ‌ர‌த்தை ஒரு ஆண் சொன்னால் அவ்வ‌ள‌வு எடுப‌டாது, ஆகையால் ஒரு இஸ்லாமிய‌ பெண் சொல்வ‌தை நீங்க‌ளே கேளுங்க‌ள்.

Faith Freedom என்ற தள நிர்வாகியாகிய அலி சினாவிற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய பெண் எழுதிய கடிதம். நான் என் கட்டுரைகளில் எழுதும் விவரங்களை, ஒரு இஸ்லாமிய பெண் எழுதுவதை படியுங்கள்.
இந்த கட்டுரையை இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை கிறிஸ்தவர்கள் மத்தியில் உண்டாக்க பதிக்கப்படுகிறது.

---------------

I am ashamed to have ever been a Muslima

பாகிஸ்தான் பெண்: நான் ஒரு முஸ்லீமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்




திரு சினா,

நான் என் வாழ்க்கையில் இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌டித‌த்தை எழுதுவேன் என்று நினைத்துக்கூட‌ பார்க்க‌வில்லை. நீங்க‌ள் ஒரு இஸ்லாமிய‌ பெண்ணோடு விவாதித்த‌ க‌ட்டுரையை நான் முத‌ன் முத‌லில் ப‌டித்தேன் ( FrongPage Magazine Article: http://www.frontpagemagazine.com/Articles/Read.aspx?GUID=3DDB4AD9-F928-4EF8-ADEC-8A9C90594254)


நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது, இஸ்லாமில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றி அறிந்து எனக்கு வேதனை உண்டானது. அதாவது, சொத்துரிமை மற்றும் விவாகரத்து சம்மந்தப்பட்ட விவரங்களும் இதில் அடங்கும். ஆனால், என் வாழ்க்கையில் இதுவரையில், போரில் பிடிப்பட்ட பெண்களை முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்பதையும், அதனை நபி அனுமதித்தார் என்பதையும் நான் அறிந்ததேயில்லை என் வாழ்க்கையில் நான் படித்த அனைத்து இஸ்லாமிய புத்தகங்களும் போரில் பிடிப்பட்ட கைதிகளை முஸ்லீம்கள் மிகவும் கண்ணியத்தோடு நடத்தினர் என்று சொல்வதை நான் படித்துள்ளேன். ஆனால், பிடிப்பட்ட பெண்களை கற்பழிப்பதில் என்ன கண்ணியம் இருக்கிறது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெக்காவை கைப்பற்றிய போது மட்டுமே இரக்கத்தோடு நடந்துள்ளார்கள். மெக்கா என்பது நபி என்று அழைக்கப்பட்டவர் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும் அங்கு அவரது உறவினர்கள் இருந்தார்கள் என்பதாலும், மெக்காவிற்கு மட்டும் இரக்கம் காட்டியிருக்கலாம்.


ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். பாகிஸ்தானில் இருக்கும் மௌலவிகள் எங்களுக்கு வினோதமான விஷயங்களைச் சொல்வார்கள். அதாவது, கண்ணாடியிலே நம்முடைய முகத்தை பார்க்கும் போது இந்த சூராவை ஓதவேண்டும், வீட்டில் நுழையும் போது இதை ஓதவேண்டும், பிராயாணம் செய்ய புறப்படும் போது, இந்த துவாவை(ஜெபத்தை) செய்யவேண்டும் என்று பல விவரங்களைச் சொல்வார்கள். இப்படிப்பட்ட விவரங்களை எங்களுக்கு அவர்கள் போதிப்பார்கள். ஆனால், போரில் பிடிப்பட்ட பெண்களை முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்ற மிகப்பெரிய விஷயத்தை எங்களிடம் சொல்லாமல் ஏன் மறைத்தார்கள்? ஆம், இதனை நாம் "கற்பழிப்பு" என்று தான் அழைக்கமுடியும். எப்படி ஒரு பெண் தன் சகோதரர்கள், அல்லது தந்தை அல்லது கணவனை கொலை செய்த அந்த ஆணோடு உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பாள். இந்த சூழ்நிலையில் என்னையோ அல்லது என் சகோதரியையோ அல்லது என் தாயையோ நான் கற்பனை கூட செய்து பார்க்க என்னால் முடியவில்லை. இந்த விவரம் என் மனதை கலக்கிவிடுகிறது. அலி சினா நீங்க‌ள் என் க‌ண்க‌ளை திற‌ந்துவிட்டீர்க‌ள். ஈராக்கில் பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌ இராணுவ‌ வீர‌ர்கள் செய்த தவறைப் பற்றி நான் மிக‌வும் வேத‌னை அடைந்தேன். ஆனால், இங்கு க‌வ‌னிக்க வேண்டிய‌து விவ‌ர‌ம் என்ன‌வென்றால், முஸ்லீம்க‌ள் இவ‌ர்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளா? முஸ்லீம்க‌ள் த‌ங்க‌ளால் முடிந்த‌ பெண்க‌ளை எல்லாம் க‌ற்ப‌ழித்தார்க‌ள். இப்போது, இஸ்லாமிய‌ கோட்பாட்டின் ப‌டி, ஈராக் ஒரு போர்க்க‌ள‌மாக‌ உள்ள‌து, என‌வே, இஸ்லாமிய‌ போத‌னைக‌ளின் ப‌டி, ஈராக்கை ஆக்கிர‌மித்த‌ இராணுவ‌ங்க‌ள், ஈராக் பெண்க‌ளை க‌ற்ப‌ழிப்ப‌து நியாய‌ம் தானே?


மற்றும் இஸ்லாமிய லாஜிக் படி, ஈராக் போரில் தோற்றுவிட்டது, இஸ்லாமின் லாஜிக் படி, ஈராக்கின் மக்கள் அனைவரும் பெண்கள் குழந்தைகள் உடபட‌ அமெரிக்காவிற்கு அடிமைகள். ஆனால், ஈராக்கில் சில எண்ணிக்கையுள்ள பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டார்கள், மற்றும் கற்பழித்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், சிறைச்சாலைக்குச் சென்றார்கள். இதையே நாம் வேறு வகையில் பார்க்கலாம், அதாவது இஸ்லாமியர் அல்லாத நாட்டை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்தால், அங்குள்ள அனைத்து பெண்களும் போரில் பிடிப்பட்ட சொத்துக்களாக பெண்கள் கருதப்படுவார்கள், அவர்களை இஸ்லாமிய இராணுவம் எல்லா பெண்களையும் கற்பழித்து இருப்பார்கள்.

என்னுடைய 6 வயது மகள் அல்லது எந்த ஒரு 6 வயது சிறுமி, 50 வயதான ஒரு ஆணை திருமணம் செய்துக் கொள்வதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது, அந்த 50 வயது ஆண் ஆன்மீகத்தில் மத விவகாரங்களில் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி.

நான் ஒரு பெண். முஹம்மது சொன்னது போல நான் அறிவில் குறைந்தவள் இல்லை. எனக்கு ஞானத்திலும் குறைவு இல்லை. என் வாழ்க்கையில் அறிவில் பல ஆண்களை நான் ஜெயித்து இருக்கிறேன். நான் படித்து பட்டம் பெற்றேன், இப்போது இரண்டாவது பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். இப்படி இருக்கும்போது எங்கள் நபி எப்படி "பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள்" என்றுச் சொன்னார்? முஹம்மதுவின் இவ்வார்த்தைகள் விஞ்ஞானத்தின் படி பிழையானதாகும்.


இப்போது ஒரு பெண் கற்பழிக்கப்படுவதைப் பற்றி கவனிப்போம். தன்னை ஒருவன் கற்பழித்தான் என்பதற்கு 4 ஆண்களை, அந்தப் பெண் உலகத்தில் எந்த நாட்டிலிருந்து சாட்சிகளாக கொண்டுவருவாள். கற்பழிப்பு என்பது சர்கஸ் இல்லை, எல்லாரும் வந்து பார்த்து சிறப்பித்து தாருங்கள் என்று அழைப்பிதழ் கொடுப்பதற்கு. கற்பழிப்பு என்பது மனிதன் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்தில் நடத்தப்படுவது. உதாரணத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கற்பமாகிவிட்டாள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். தான் தற்பழிக்கப்பட்டாள் என்பதை நிரூபிப்பதற்கு தனக்கு 4 ஆண்களின் சாட்சிகள் தேவை, ஆனால், அவளுக்கு சாட்சி சொல்ல ஒரு ஆணும் கிடைக்கமாட்டான். ஆனால், திருமணத்திற்கு வெளியே தான் "உடலுறவில் ஈடுபட்டாள் என்பதற்கு மட்டும் ஆதாரத்தை தன் கர்ப்பத்தில் சுமந்துக்கொண்டு இருப்பாள்". இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய சட்டப்படி என்ன நடக்கும்? தன்னை ஒருவன் கற்பழித்தான் என்பதை நிருபிக்க தன்னால் ஒரு ஆதாரத்தையும் அவளால் காட்டமுடியாது? ஆக, அவள் விபச்சாரம் செய்தாள் என்பதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்லெறியுண்டு மரிப்பாள். இது நியாயமானதாகவும் அல்லது லாஜிக்காகவும் (அறிவுடமையாகவும்) தெரிகின்றதா? இல்லை இல்லை, இதயம் மற்றும் மூளை என்பது ஒருவனுக்கு இருந்தால், அவனுக்கு இவைகள் நியாயமானதாக தெரியாது.


ஜூலியா ரோச் என்ற பெண்மணியோடு உங்களின் உரையாடல் என்னை அசைத்துவிட்டது. இதைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், மூளை குழம்பிவிட்டதாக உணருகிறேன். என் வாழ்க்கை முழுவதும் நான் பின்பற்றியது என்ன? இஸ்லாமிய அறிஞர்கள் நமக்கு வெறும் நல்லவைகளை மட்டும் சொல்வார்கள், ஆனால், இந்த உண்மைகளைச் சொல்லமாட்டார்கள்.


பாகிஸ்தானில் இருக்கும் நாங்கள் குர்‍ஆனை மிகவும் கூர்ந்து கருத்தோடு படிக்க கவலைப்படுவதில்லை. எங்கள் பள்ளிக்கூடங்களில் சொல்லப்பட்டவைகளை மட்டுமே நாங்கள் தெரிந்துவைத்துக்கொண்டு இருக்கிறோம். மீதமுள்ள விவரங்களுக்கு நாங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் மீது ஆதாரப்பட்டு இருக்கிறோம், இவர்கள் நம்மிடம் பொய்களைச் சொல்வார்கள், இஸ்லாமில் உள்ள நல்லவைகளை மட்டும் சொல்வார்கள், அடிமைகள் பற்றியும், கற்பழிப்பது பற்றிய விவரங்களும் சொல்லமாட்டார்கள்.


இந்த விவரங்களை நான் என் குடும்ப நபர்களுக்குச் சொன்ன போது, என்னை அவர்கள் "காபிர்" என்று சொல்லி கேலி செய்தார்கள். நான் பாகிஸ்தானில் இருக்கும் வரை நான் இப்படியே இருந்துவிடுகிறேன். இஸ்லாமுக்கு எதிராக சொல்லப்படும் எதையும் நான் கேட்கக்கூடாது. என் கண்களையும் காதுகளையும் நான் மூடிக்கொள்ளவேண்டும். நான் இஸ்லாமை விட்டு வெளியே வரக்கூடாது, அப்படி வந்தால் என்னைப்பற்றி என் பெற்றோர்கள் முஸ்லீம்களிடையே வெட்கமடையவேண்டி வரும். நான் இனி இஸ்லாமை பின்பற்றப்போவதில்லை. ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைத்து என் தோழிகளுக்கு நான் சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் அவர்கள் சிந்திக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.


இப்படிக்கு
கோமல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Source: http://www.faithfreedom.org/2009/01/20/i-am-ashamed-to-have-ever-been-a-muslima/

Tamil Christians Source:  http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=27823#27823

 
 

குரான் முரண்பாடுகள்-24

ஒரே நிகழ்ச்சியில் வரும் "நேரடி பேச்சுக்களில்" உள்ள வித்தியாசங்கள்


Variant "direct speech" quotations from the same incidents:


கீழே தரப்பட்ட நிகழ்ச்சி விவரங்கள் "நடந்துவிட்ட‌ நிகழ்ச்சியைப்" பற்றியது தான். அவைகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மை வாய்ந்த சரித்திர நிகழ்வுகளாகும்(உதாரணத்திற்கு, அல்லா ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து அனுப்பியது ஒருமுறைத் தான், அல்லா மோசேயை எரியும் புதரிடம் சந்தித்தது ஒரு முறை தான்...). ஆக என்ன நடந்தது என்பதற்கு? ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு. ஆனால், குர்‍ஆனில் உள்ள பல சூராக்களில், இருவருக்கும் அல்லது அனேகருக்கும் இடையே நடந்த பேச்சு உரையாடலை இரண்டு/மூன்று வித்தியாசமான முறையில் குர்‍ஆன் சொல்கிறது. இவைகள் அனைத்தும் "நேரடி உரையாடல் பேச்சுக்கள்-all 'direct speech' quotations" தான், இவைகள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குர்‍ஆனில் வித்தியாசமாக உள்ளது. உண்மையில் இந்த மேற்கோள்களில் பேசுபவர் "பேசிய வார்த்தைகள்" எது? அவைகளில் எந்த விவரம் சரியானது?
 
1) ஆதாமை உருவாக்கியதைப் பற்றி அல்லாஹ் பேசுகிறார்


 
15:28 (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
38:71 (நபியே! நினைவு கூர்வீராக!) "நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; 

 

 

Monday, January 19, 2009

சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி - The Testimony of Brother Sharafuddin


 


 

மலாய் மொழியில் படிக்க‌ - Bahasa Melayu

 

சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி


The Testimony of Brother Sharafuddin

 
எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.

 
என் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின்(Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிர இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வந்தேன். உசுலுத்தீன்(Usuluddin), குர்ஆனியக் கல்வி போன்றவற்றைப் நான் கற்கவேண்டுமென்று என் பெற்றோர்கள் கண்கானிப்பாய் இருந்தார்கள்.

 
 
இது, நான் ஆன்மீக‌ மற்றும் சமய விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க உதவியது. நல்ல‌ பக்தி விநயத்திலும் மார்க்க எழுத்தாளர்களின் சமயக் கட்டுரைகளையும், பண்டைய இஸ்லாமிய மார்க்க அறிவு கட்டுரைகளை(fiqh and theology) வாசிப்பதிலும் நான் பூரண திருப்தியடைந்தேன். இவைகளில் என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.

 
 
கடவுளுக்குப் பயந்த ஒரு முஸ்லீமாக வாலிப வயதில் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அரும் பாடுபட்டேன். எனது சகோதர சகோதரிகளும் எனது சமயப் பற்றை மற்றும் இஸ்லாமிய மார்க்க ஆன்மீக விவகாரங்களில் நான் அதிக அக்கறை கொண்டு இருப்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

 
 
எனது வாலிப வயதில் நான் இலட்சியமாகக் கொண்ட எனது கனவு பல்கலைக் கழகத்தில் நுழைந்தேன். அப்போது நான் இன்னும் பல வாழ்வின் ஐயங்களுக்கு இஸ்லாம் போதனைக்குள் பதிலைத் தேடிக் கொண்டிருந்தேன். இஸ்லாம் தான் மனிதர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய (இயல்பான) இயற்கை சமயம்(Natural Religion) என்று இன்னும் நம்பிக் கொண்டிருந்தேன்.

 
 
படிப்படியாக எனது சிந்தனை வளர‌ ஆரம்பித்தது. குறிப்பாக பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடனும் நண்பர்களுடனும் நேரடி மார்க்க விவாதத்தில் ஈடுபட்ட போது இது நிகழ்ந்தது. நான் ஏன் என் சிந்தனைகளை விரிவாக்கவேண்டிய அவசியத்தில் இருந்தேன் என்பதற்கு ஒரு காரணமுண்டு. அதாவது நான் தினமும் தொடர்ந்து செய்யும் இஸ்லாமிய சடங்குகளினால் திருப்தி அடையவில்லை. மற்றும் ஒரு நல்ல முஸ்லீமாக இருந்தும் எப்படி என் மார்க்கம் என்னை ஒரு "ஆன்மீக அதிருப்தியில்" வைத்தது என்பது தான் என்னை வாட்டியது.

 
 
நான் சொல்லவந்தது இது தான்: நான் இஸ்லாமிய சட்டதிட்டங்களைத்(Din of Islam) தீவிரமாகப் பின்பற்றி வந்தாலும், பர்து ஐன்(fardu-ain) என்றுச் சொல்லக்கூடிய மார்க்க நம்பிக்கை, என்னிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றியிருந்தாலும், அல்லாஹ் அல்லது இறைவன் என்பவர் எப்போதும் என்னிடத்தில் இருந்து மிகவும் தொலைவாக இருப்பதாகவே உணர்ந்தேன். "ஒரு வார்த்தை ஜெபித்தாலும் அல்லா உன்னை நெறுங்கி வருவான்" போன்ற வாசகங்கள் (இஸ்லாமிய ஸ்லோகங்கள்) இருந்தாலும், உண்மையான அனுபவத்தில் பார்த்தால், இது இஸ்லாமிலிருந்து வந்த வாசகம் அல்ல என்பதை அறியலாம். நான் அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவதில் மிகவும் நேர்மையாக இருந்தாலும், அவருடைய அன்பையும் கிருபையையும்(ar-rahman ir-rahim) என்னால் முற்றிலும் நேரடியாக அனுபவிக்க முடியவில்லை, அதைப் பற்றிய நிச்சயத்தன்மையும் இல்லை.

 
 
வேறுவகையாகச் சொல்லவேண்டுமானால், அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) மிகவும் தூரமானவராக இருக்கிறார்! அவர்களின் வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் அவர் தொலைவிலிருந்தே நடத்துகிறார். பிலா தஷ்பிஹ் (Bila Tashmih) என்ற இஸ்லாமிய போதனையும் இதேயே சொல்வதால், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமது சிருஷ்டிப்பின் மீது அல்லாஹ் "அன்பும் கிருபையும்" நிறைந்தவர் என்று இஸ்லாம் போதித்தாலும், பிலா காய்பா(bila kayfa) மற்றும் பிலா தஷ்பிஹ் (bila tashbih) போன்ற தத்துவங்கள், மனிதன் இவ்வுலகில் இயல்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய இறை அன்பையும் கிருபையையும் நிராகரிக்கின்றன. இந்த இரண்டு அல்லாஹ்வின் தன்மைகளும் மனித புத்திக்கு எட்டாததாக இருந்தது.

 
 
இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட கோட்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறார்கள், மற்றும் தக்லிக்(Taqlid) என்றுச் சொல்லக்கூடிய ஆரம்பகால இஸ்லாமிய அதிகார பூர்வமான சட்டங்களை கேள்விகேட்காமல் கீழ்படியவேண்டியுள்ளது. "எப்படி? " என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப(Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்று, உண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக‌ நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன், ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்கிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போது, நாம் நிந்திக்கப்படுவதும், வசைபாடப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போது, நமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் "இது இறைவனின் வார்த்தைகள், இவற்றை நம்பி கீழ்படி!( These are God's words, just believe it and obey it!)" என்பது தான். இறுதியாக, அவர்களும் (உஸ்தாத்களும்) திக்குத் தெரியாதவர்களாய், நம்முடைய நேர்மையான கேள்விகளுக்கு பகுத்தறிவோடு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.

 
 
இது போன்ற அனுபவங்கள் தாம் இஸ்லாமின் நம்பகத்தன்மை மீதும் அதன் போதனைகள் மீதும் நான் கொண்டிருந்த நம்பிக்கையை ஒரே அடியாய் உடைத்து விட்டன. ஆனால், இதே மதம் தான் எல்லா விதமான விக்கிரக ஆராதனைகளையும் முற்றிலும் எதிர்க்கின்றது. இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மது, இஸ்லாமிய போதனையாகிய‌ "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்பதை பரப்பினார். முஹம்மதுவின் காலம் முதற்கொண்டு இன்று வரை, முழு இஸ்லாமிய உலகில், எல்லா இஸ்லாமியர்களும் ஒவ்வொரு நாளும் 5 வேளை மக்காவில் கருங்கல் உள்ள விக்கிர ஆராதனைக்காரர்களின் கோவிலாக இருந்த காபாவை நோக்கி குனிந்து வணங்குகிறார்கள், இது தான் ஆச்சரியம் ஆனால், உண்மை. பகுத்தறிவோடு சிந்தித்தால், அல்லாஹ் அல்லது இறைவன் காணமுடியாதவர் மற்றும் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது உண்மையானால், ஏன் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், பல தெய்வங்களை வணங்கிய மக்களின் கோவிலாக இருந்த‌, கருங்கல் உள்ள மக்காவை நோக்கி தொழுதுக் கொள்ள வேண்டும்? ஆதாம், ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த(hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன? பேச முடியாததும், காண முடியாததும், செவி மடுக்க முடியாததும், சுவாசிக்க முடியாததுமான இக்கல்லை மகிமைப்படுத்தி வணங்கச் செய்வதற்கான காரணம் என்ன?

 
 
போதாதற்கு எல்லா முஸ்லீம்களும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்காமல்(taqlid) விசுவாசத்தோடு இதனைப் பின்பற்ற வேண்டும்? காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும், செவிடும், ஊமையுமான, சுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்லையா? இது விக்கிர ஆராதனை இல்லையா? இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய பாவம் செய்தவதற்கு ஆரம்பமில்லையா அல்லது மூலமில்லையா?

 
 
இஸ்லாம் மீது அதிருப்தியடைந்த நான், படிப்படியாக இம்மையிலும் மறுமையிலும் உள்ள வாழ்வைப் பற்றி முஸ்லிம் அல்லாதார் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சுயமாகக் கற்றறியத் தீர்மானித்தேன். பிறருடைய வற்புறுத்தல் இன்றி முழுக்க முழுக்க என் சொந்த முயற்சியினால், இஸ்லாமிய பார்வையால் ஒரு வட்டத்திற்குள் இருந்த என் பரிமானத்தை விஸ்தரிக்க‌ முயற்சி எடுத்தேன். இறை மறுப்புக் கொள்கையை ஒரு காலத்தில் அணுசரித்து, பின்னர் ஏதாவது ஒரு மத‌ நம்பிக்கையைப் பற்றிக் கொண்ட நபர்களின் எழுத்துக்களில் நான் ஈடுபாடு காட்டினேன்.

 
இவர்களில், இங்கிலாந்திலுள்ள‌, ஆக்ஸ்பார்ட் பல்கலைக் கழக தத்துவ ஞானியான சி.எஸ் லூயிஸ் (C.S.Lewis) குறிப்பிடத் தகுந்தவர். இறை மறுப்பு கொள்கை உட்பட, நித்திய வாழ்க்கை, தெய்வத் தன்மை போன்ற விவகாரங்களில் அவர் அறிவுப் பூர்வமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் அதிகம் போராடியிருக்கிறார். முன்னால் நாத்தீகன் என்ற முறையில் கிறிஸ்தவத்தையும் பிற சமயங்களைப் பற்றியும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இறுதியில் நாத்தீகத்தை நிராகரித்து விட்டு கிறிஸ்தவத்தைத் தழுவினார். இறுதியில், தனக்கு உண்டான ஆர்வத்தை அடிப்படியாகக் கொண்டு கிறிஸ்தவ சித்தாந்தத்தின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனையில் உள்ள நியாயத்தைப் பற்றி, நம்பகத்தன்மையைப் பற்றியும் பல ஆய்வு நூல்களை லூயிஸ் எழுதியுள்ளார்.

 
"வெறும் கிறிஸ்தவம்(Mere Christianity)" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய நூல் என்னைக் கவர்ந்த ஒன்று. அதன் மையக் கருத்தும், அதன் விளக்கமும், வர்ணனையும் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக நான் எதிர்நோக்கி வந்த கேள்விகள் ஆன்மீக உண்மைகள் போன்ற சவால்களுக்கு அந்நூல் பதிலளித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகு, நான் நேர்மையான முறையில் சொந்தமாக கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றியும், நாங்கள் சைய்யதினா ஈஸா அல் மஸீஹா(Sayidina Isa Al-Masih) என்றுச் சொல்லும் இயேசு கிறிஸ்துவின் முழு போதனைகளையும் ஆராயத் தொடங்கினேன்.

 
இறுதியில் இறைவனின் உண்மையான அன்பை விவரிக்கும் சுவிசேஷப் பகுதியைக் கண்டேன். அந்த வசனம் வறுமாறு...
 
 
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

"For GOD so LOVED the World, that He gave us His one and only Son, so that all who believe in him should not perish (be destroyed) but would have everlasting life.."(யோவான் 3:16).
 
 
இதுதான் நான் தேடிவந்த உண்மையான தெய்வ அன்பின் வெளிப்பாடு ஆகும். ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாத தெய்வ அன்பைப் பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைதிலிருந்து இது எவ்வளவு முரண்பட்டிருகிறது! கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை! கடவுள் தமது மனைவியை அறிந்ததால் தான் இந்தக் குமாரன் பிறந்தார் என்று வேதாகமமோ அல்லது நற்செய்தி நூல்களோ போதிக்கவில்லை. துரதிஷ்டவசமாக, குர்ஆனில் காணப்படுகின்ற அடிப்படை இல்லாத‌ ஒரு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக வீசப்படுகிற ஒரு கடுமையான ஆனால் மேம்போக்கான குற்றச்சாட்டு இதுவாகும். இது கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சந்தேகத்தையும் விரோதத்தையும் வளர்த்துவிடுகிறது.

 
 
பைபிளில் விளக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவம் சரீரப் பூர்வமாகவோ உடலுறவு மூலமாகவோ உண்டானதன்று. கிறிஸ்தவர்கள் கூட இஸ்லாமியர்கள் கருதுவது போல‌ தவறான புரிந்துக்கொள்வதில்லை. உண்மையில், அறிவார்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கூறும் இந்த உடலுறவுக் கொள்கையை முன் நின்று எதிர்ப்பார்கள். இந்த கோட்பாடு, கிறிஸ்தவ சுவிசேஷங்களில் காணப்படவும் இல்லை.

 
மலாய் மொழியில், நாங்கள் "நதியின் மகன் - son of the river (Anak Sungai)", "சாவியின் மகன் - son of the key (Anak Kunci)", "நிலவின் குழந்தை - child of the Moon (Anak Bulan)" மற்றும் இது போல அனேக வகைகளில் வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இவைகள் நீரோடையையும், சாவிக் கொத்தையும், இளம் பிறையையும் குறிப்பிடுகிறது. அனாக்(Anak) என்ற சொல்லுக்கு மகன்(Son) என்ற பொருள் ஆகும். "மகன்" என்ற வார்த்தை வருவதினால், சரீர சேர்க்கையினால்(உடலுறவினால்) தான் ஆற்றிலிருந்து நீரோடை பிரிகிறதா? உடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதா? அல்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா? இப்படியா இதற்கு நாம் பொருள் கூறுவோம், நிச்சயமாக இல்லை!

 
 
நாங்கள் "சைய்யதினா ஈஸா அல்-மஸீஹ்" என்றுச் சொல்லக்கூடிய‌ இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டான எல்லையில்லாத கிருபையையும் ஆசிர்வாதத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன். இதை நான் பரிபூரணமாக முழுமனதோடும் சொல்கிறேன். இன்று எனது குடும்பத்தார் அனைவரும் மனித இனத்திற்கு ஜீவனுள்ள வார்த்தையாகிய கர்த்தரின் நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் அனுபவித்து வருகிறோம். பைபிளில் கூறப்பட்டுள்ள சைய்யதினா ரப்பானி ஈஸா அல் மஸீஹாவின் வார்த்தைகளைக் கைக் கொள்வதில் இப்போது எங்களுக்கு இந்தப் பிரச்ச‌னையும் ஏற்படவில்லை. இது எங்களுக்குக் கிடைத்த சிலாக்கியமே.

 
 
"வெறும் கிறிஸ்தவம்" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய வரிகளை முன் வைத்து எனது சாட்சியை முடிக்கிறேன்.

 
 
கிறிஸ்தவம் மனிதனால் உண்டாக்கப்பட்ட சமயம் என்றால், நிச்சயமாக அதன் விதிகளை சுலபமாக்கியிருக்க‌ முடியும். ஆனால், அது உண்மையல்ல. மதங்களை உருவாக்கும் மனிதர்களோடு, நாம் எளிமையை ஒப்பிடமுடியாது. அது எப்படி முடியும்? நாம் உண்மை நியதிகளை சந்திக்கிறோம். இயல்பாகவே, ஒருவன் எளிமையாக வாழ விரும்பினால் வாழலாம், அவன் எந்த நியதி பற்றியும் கவலைப்படாதவனாக இருந்தால்.

"If Christianity was something we were making up, of course we could make it easier and simpler. But it IS NOT. We cannot compete, in simplicity, with people who are inventing religions. How could we? We are dealing with Fact. Of course anyone can be simple if he has no facts to bother about."

C.S.Lewis, Mere Christianity (New York, The Macmillan Company, 1943, Page 145)
 
 
உங்களுடைய சவாலுள்ள ஆர்வத்தை ஜீவிக்கின்ற மெய்யான தேவன் தமது அளவில்லாத கிருபையால் ஆசீர்வதிப்பாராக!

 
இப்படிக்கு
ஷரபுத்தீன்

 
குறிப்பு:

"வெறும் கிறிஸ்தவம்" என்ற நூலை இணையத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்.


இதர சாட்சிகளை தமிழில் படிக்க
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்


© Answering Islam, 1999 - 2009. All rights reserved.